கோவையில் தொழிலதிபரிடம் மோசடியில் ஈடுபட்ட சுகேஷ் சந்திரசேகருக்கு குற்றப்பத்திரிகை தாக்கல்

கோவையில் தொழிலதிபரிடம் 2.40 லட்சம் ரூபாய் மோசடி செய்த வழக்கில் சுகேஷ் சந்திரசேகர் மற்றும் சந்திரசேகர் ஆகியோர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்கள் இருவருக்கும் இன்று 60 பக்க குற்றப்பத்திரிகை வழங்கப்பட்டது. 

கோவையில் கடந்த 2011ம் ஆண்டு தொழிலதிபர் ராஜவேல் என்பவருக்கு கர்நாடக மாநிலத்தில் டெண்டர் எடுத்துக்கொடுப்பதாக கூறி 2.40 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக சுகேஷ் சந்திர சேகர் மற்றும் அவரது தந்தை சந்திரசேகர் ஆகியோர் கைது செய்யப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் ஆஜராகாமல் சுகேஷ் சந்திரசேகர் தலைமறைவானார். அவரது தந்தை மட்டும் நீதிமன்றத்தில் ஆஜராகி வந்தார். 

இந்நிலையில் முடக்கப்பட்ட அதிமுக-வின் இரட்டை இலை சின்னத்தை மீட்டுத் தருவதாக பணம் பெற்ற வழக்கில் சுகேஷ் தில்லியில் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து கோவை நீதிமன்றத்திலும் ஆஜர் படுத்தப்பட்டு வருகிறார்.

இந்நிலையில் இன்று சுகேஷ் சந்திரசேகரை நீதிமன்ற காவல் நீட்டிப்பிற்காக தில்லி காவல் துறையினர் கோவை இரண்டாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். சுகேஷ் சந்திரசேகரின் தந்தை சந்திரசேகரும் இன்று நீதிமன்றத்தில் ஆஜரானார்.

இதனையடுத்து சுகேஷ் சந்திரசேகரின் நீதிமன்ற காவலை வரும் 20-ம் தேதி வரை நீடித்து நீதிபதி நம்பிராஜன் உத்திரவிட்டார். மேலும் இன்று சுகேஷ் சந்திரசேகர் மற்றும் சந்திரசேகர் இருவருக்கும் குற்றப்பத்திரிகை நகலை வழங்கவும் உத்திரவிட்டார். இதனையடுத்து இருவரும் குற்றப்பத்திரிகை நகலை பெற்றுக்கொண்டனர். இதனையடுத்து சுகேஷ் சந்திரசேகரை தில்லி காவல் துறையினர் ரயில் மூலம் தில்லிக்கு அழைத்துசென்றனர்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...