பொறியியல் கல்லூரி மாணவர்கள் அறையில் வெடிபொருட்கள்- காவல்துறையினர் விசாரணை



கோவையில் பொறியியல் கல்லூரி மாணவர்கள் தங்கி இருந்த அறையில் வெடி பொருட்கள் இருந்ததால், அவற்றை பறிமுதல் செய்த காவல்துறையினர் தொடர்ந்து மாணவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை அடுத்துள்ள கோவைபுதூரில் ஏராளமான மாணவர்கள் கல்லூரி அருகே வீடு வாடகைக்கு எடுத்து தங்கி படித்து வருகின்றனர். இதில், அப்பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் படிக்கும் பொறியியல் மாணவர்களும் இவ்வாறான வீடுகளில் தங்கியிருந்த நிலையில், அவர்களது வீட்டிற்கு புதிது புதிதாக சில நபர்கள் வந்து சென்றுள்ளனர்.

இதனால் சந்தேகமடைந்த அப்பகுதி பொதுமக்கள் அப்பகுதீ காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து மாணவர்கள் தங்கியிருந்த பகுதிக்கு விசாரணைக்காக காவல்துறையினர் வந்த நிலையில்,காவல்துறையினரைக் கண்ட  நபர்கள், அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

இதனை தொடர்ந்து மாணவர்கள் தங்கியிருந்த அறையை போலீசார் சோதனையிட்ட போது, பெரிய அளவிலான பட்டாசுகள் ஒரு பையில் நிறைய இருப்பதும், அவற்றின் மேலே வெடி பொருட்கள் போல கயிற்றில் சுற்றி இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

அதனை பறிமுதல் செய்த குனியமுத்தூர் காவல்துறையினர் அறையில் தங்கி இருந்த 3 பொறியியல் மாணவர்களிடம் விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர். மேலும், அந்த பொருட்கள் வெடி குண்டு நிபுணர்கள் மற்றும் தடய அறிவியல் துறையினரிடம் சோதனைக்காக அனுப்பப்பட்டதை தொடர்ந்து ஆய்வுகள் செய்யப்பட்டு வருகிறது. இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...