கடினமான அறுவை சிகிச்சையை முதலமைச்சர் காப்பீட்டில் செய்து சாதனை படைத்த பிஎஸ்ஜி மருத்துவமனை மருத்துவர்கள்

பொள்ளாச்சியைச் சேர்ந்த 55 வயது நபர் ஒருவர் மூச்சுக் கோளாறு காரணமாக கடந்த ஜூன் 28ம் தேதியன்று கோவை பிஎஸ்ஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவரது இரத்தக் குழாயில் இரத்தம் வெளியேறிவருவதை கண்டறிந்தனர்.

பின், அந்த இரத்தக் குழாயினை மாற்ற வேண்டும் என முடிவு செய்யப்பட்டது. இதில், இரண்டு குழாயில் ஒரு குழாய் மட்டுமே செயல்பட்டு வந்தது. மற்றொரு குழாய் செயல்படாமல் இருந்துள்ளது. பின், இரத்தம் வெளியேறிவந்த குழாய் சிகிச்சை மூலம் மாற்றப்பட்டது. 

பெண்டல் எனப்படும் இந்த சிகிச்சை பிஎஸ்ஜி மருத்துவமனையின் சிடிவிஎஸ் குழுவினர் தமிழக முதலமைச்சரின் மருத்துவக் காப்பிட்டுத் திட்டத்தின் கீழ் செய்து சாதனை படைத்துள்ளனர். 5 மணி நேரம் நடைபெற்ற இந்த சிகிச்சைக்குப் பின் அந்த நபர் பூரண குணமடைந்தார். 

தொடர்ந்து, ஒருவாரகாலம் மருத்துவக் கண்காணிப்பில் இருந்த நபர் இன்று நல்ல நிலையில் வீடுதிரும்பினார்.

இந்த பெண்டல் சிகிச்சை 500-யில் இருந்து ஆயிரம் இதய சிகிச்சையில் ஏதேனும் ஒன்றே வரும். இதுபோன்று 10-க்கும் மேற்பட்ட சிகிச்சைகள் பிஎஸ்ஜி மருத்துவர்களால் செய்யப்பட்டுள்ளது. அவர்கள் தொடர்ந்து கண்காணிப்பிலும் இருந்து வருகின்றனர். 

இந்த சிகிச்சை குறித்து மேலும், தகவலுக்கு பிஎஸ்ஜி மருத்துவமனை, சிடிவிஎஸ் துறை பேராசிரியர், தலைவர் மருத்துவர் பி.ஆர்.முருகேசன் என்பவரை அணுகலாம்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...