ஈஷா யோகா மையத்தில் ஜூலை 9 அன்று குருபௌர்ணமி அனுசரிப்பு

கோவை மாவட்டம், வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் அமைந்துள்ள ஈஷா யோகா மையத்தில் குரு பௌர்ணமி விழா ஜூலை 9ஆம் தேதியன்று (ஞாயிற்று கிழமை) சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஆயிரக்கணக்கான மக்கள் ஈஷா மையத்திற்கு வருகைபுரிந்து, கொண்டாட்டங்களில் கலந்துகொள்ள உள்ளனர்.

இந்நாளில் வரலாற்று சிறப்புமிக்க 112 அடி ஆதியோகியின் முன்னிலையில் ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு சத்சங்கம் நிகழ்ச்சி நடைபெறவிருக்கிறது. நிகழ்ச்சியில் சத்குரு சொற்பொழிவு அளிப்பதுடன் பங்கேற்பாளர்களின் கேள்விகளுக்கு விளக்கம் அளிக்கவுள்ளார். இந்நிகழ்ச்சிக்கு அனுமதி முற்றிலும் இலவசம்.

மேலும், இந்நிகழ்ச்சியின் நேரலை ஒளிபரப்பினை டாடாஸ்கை குரு தொலைக்காட்சி (#1060) அல்லது http://isha.sadhguru.org/guru-purnima/ ஆகியவற்றில் காணலாம்.

மேலும், அன்றைய தினம் தியானலிங்கத்திற்கு காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை பால் மற்றும் நீர் அர்பணிப்பு நடைபெறும். மாலை 6.30 மணிக்கு லிங்கபைரவி உற்சவ மூர்த்தி ஊர்வலம் மற்றும் மஹாஆரத்தி நடைபெறவுள்ளது.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...