ஓ.என்.ஜி.சி நிறுவனத்தையும் மத்திய அரசையும் கண்டித்து கோவையில் முற்போக்கு அமைப்புகள் ஆர்பாட்டம்

தமிழகத்தில் உள்ள எண்ணை வளத்தை சுரண்டும் ஓ.என்.ஜி.சி நிறுவனத்தையும் மத்திய அரசையும் கண்டித்து கோவையில் முற்போக்கு அமைப்புகள் சார்பாக நடத்தப்பட்ட ஆர்பாட்டத்தில் கலந்து கொண்ட 50 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

தஞ்சாவூர் மாவட்டம் கதிரமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி நிறுவனத்தை அகற்றிட வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது காவல்துறை தடி அடி நடத்தினர். மேலும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்து , ஊருக்குள் காவல்துறை பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.

கதிராமங்கலத்தில் போராட்டதில் ஈடுபட்டவர்கள் மீது தாக்குதல் நடத்திய காவல்துறையை கண்டித்து தந்தை பெரியார் திராவிட கழகம் , உள்ள முற்போக்கு அமைப்புகளை சேர்ந்தவர்கள் கோவை காந்திபுரம் பேருந்து நிலையம் முன்பாக ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் கதிரமங்கலத்தில் இருக்கும் காவல்துறை மற்றும் ஓ.என்.ஜி.சி நிறுவனத்தை கிராமத்தில் இருந்து அகற்ற கோரியும், கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்ய கோரியும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர். மத்திய அரசும், ஓ.என்.ஜி.சி நிறுவனமும் தமிழகத்தின் எண்ணை வளங்களை சுரண்ட முயற்சிப்பதாகவும் குற்றம்சாட்டினர். அனுமதியின்றி ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட 50 க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...