ஸ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கல்லூரியில் மரம்நடு விழா

கோவைப்புதூரில் அமைந்துள்ள ஸ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டம் சார்பாக மரம் நடு விழாவும், மரம் நடுதல் குறித்த விழிப்புணர்வுக் கவிதைப் போட்டியும் நடத்தப் பெற்றன. மரம் நடுதல் வாரத்தின் இறுதி நாளினை முன்னிட்டுக் கல்லூரியின் மைதானத்தைச் சுற்றிலும் நாட்டு நலப்பணித் திட்டத்தின் களப் பணியாளர்கள் மரம் நடுதலைத் தொடங்கினர். 

இதனை முன்னிட்டுக் கல்லூரியின் தமிழ்த்துறையும் நாட்டுநலப்பணித் திட்டமும் இணைந்து ‘வனதேவதை’ என்ற தலைப்பில் கவிதைப்போட்டி நடத்தியது. போட்டியில் மிகுதியான மாணவ மாணவியர்கள் கலந்துகொண்டு தங்கள் படைப்புகளை வழங்கினர். முன்னதாக கல்லூரியின் முதல்வர் வி.இராதிகா மரம் நடுதலைத் தொடங்கி வைத்து வாழ்த்துரை வழங்கினார். நாட்டு நலப்பணித் திட்டத்தின் திட்ட அலுவலர் க.பாலாஜி மரம் நடுதலிலும் இலக்கியப் போட்டியிலும் கலந்து கொண்டவர்களைச் சிறப்பித்து நன்றியுரை வழங்கினார்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...