பெண்களுக்கு சமமான மரியாதையை வழங்க வேண்டும் என பட்டமளிப்பு விழாவில் நீதிபதி குரியன் ஜோசப் பேச்சு


கோவை, ஆலந்துறையை அடுத்துள்ள காருண்யா பல்கலைக்கழகத்தின் இன்று 16வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. விழாவில், சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசிய உச்சநீதிமன்ற நீதிபதி குரியன் ஜோசப் பெண்களுக்கு சமமான உரிமையும், மரியாதையும் வழங்கப்பட்டால் மட்டுமே சீரான சமுதாயம் உருவாகும் என தெரிவித்துள்ளார்.

பட்டமளிப்பு விழாவில் அவர் பேசுகையில், இளைஞர்கள் சட்டத்தை மதிக்க வேண்டும் என்றும், அனைவரையும் சகோதரர்களாக மதிப்பதுடன் இயற்கை வளங்களை காப்பற்றுவதில் கவனம் கொள்ள வேண்டும் என்றார். நமது முன்னோர்களை விட தற்போதைய சமுதாயத்தினருக்கு தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் வாய்ப்புகள் அதிகரித்துள்ளதால் அதனை முழுமையாக இளைஞர்கள் பயன்படுத்த வேண்டும் என வலியுறுத்தினார். தவறுகளில் இருந்து பாடங்கள் கற்றுக்கொள்ளுதல் அவசியம் என்றார்.

மேலும், நாட்டின் இறையாண்மையையும், ஒற்றுமையையும் பாதுகாக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இந்திய அரசியல் சாசனம் மற்றும் அதன் சட்டத்தையும் இளைய சமுதாயம் முழுமையாக கற்றுக்கொள்வதுடன், அதனை சமுதாய மேம்பாட்டிற்கு செயல்படுத்தவும் முன்வர வேண்டும் என்று கூறினார். இந்தியாவில் மனித வளமும், தரமும் அதிகரித்து வருவதால் தேடுதல் மூலம் விடா முயற்சியால் வெற்றிப்பெற இளைய சமுதாயத்தினர் முனைப்புக் காட்ட வேண்டும் என்றார். இந்திய சாசனம் வழங்கியுள்ள சம உரிமை, பேச்சுரிமை, வாழும் உரிமை பங்கம் ஏற்படும் வகையில் செயல்படுவர்களுக்கு எதிராக கடுமையான குரல் கொடுக்க வேண்டும் எனக் கூறினார். 

பின்னர், பல்கலையில் பட்டம் பயின்ற 1886 மாணவர்களுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. இதில் காருண்யா பல்கலைக்கழக வேந்தர் பால் தினகரன், துனை வேந்தர் ஜேம்ஸ் மற்றும் அறங்காவலர் ஸ்டெல்லா தினகரன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...