மண்ணெண்ணெய் விளக்கு வெளிச்சத்தில் படித்த 12-ம் மாணவி உடல் கருகி பலி: கோவையில் சோகம்

கோவை க.க.சாவடி பகுதியைச் சேர்ந்தவர் ரத்தினசாமி (49). இவரது மகள் தனலட்சுமி (17). இவர் அப்பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 12-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 1-ம் தேதி வீட்டில் மின்சாரம் இல்லாததால் மண்ணெண்ணெய் விளக்கு வெளிச்சத்தில் படித்துக் கொண்டிருந்தார்.  விளக்கில் மண்ணெண்ணெய் தீர்த்துவிட, அதில் மண்ணெண்ணெய் நிரப்பியுள்ளார். அப்போது தவறுதலாக மண்ணெண்ணெய் தனலட்சுமியின் உடல் மீது விழுந்துள்ளது. இதை கவனிக்காத அவர், மண்ணெண்ணெய் விளக்கை கொளுத்தியுள்ளார். அப்போது பரவிய தீ தனலட்சுமியின் உடல் முழுவதுமாக பற்றி எரிந்துள்ளது. தனலட்சுமியின் கூச்சல் சத்தத்தை கேட்ட அப்பகுதி மக்கள் அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். 

உடல் முழுவதும் 56 சதவிகிதத்திற்கும் மேல் தீக்காயம் ஏற்பட்ட நிலையில் மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், நேற்று மாலை சிகிச்சை பலனின்றி தனலட்சுமி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து ரத்தினசாமி அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த க.க. சாவடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவையில் மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப் போட்டி: 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

கோவையில் உள்ள கங்கா முதுகுத்தண்டு காயம் மறுவாழ்வு மையத்தில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப்...

‘பியூஸ் கட்டை திருட்டு’, ‘சதி’ என ரீல்களை நிறுத்திவிட்டு, ரியல் நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும்: செந்தில் பாலாஜி

தமிழகத்தில் தொடரும் மின்வெட்டு மற்றும் மக்கள் போராட்டங்கள் தொடர்பாக, பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்குப் பதிலாக திசைதிருப்...

கிணத்துக்கடவில் 10,000 மரக்கன்றுகள் நடவு தொடக்கம்

கிணத்துக்கடவு கொண்டம்பட்டி ஊராட்சியில் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் 10,000 மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர...

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பிய வழக்கில் 3 காவலர்கள் பணியிடை நீக்கம்

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய மோசடி வழக்கு கைதிக்கு உதவியதாக இரண்டாம் நிலை காவலர் மற்றும் கார் ஓட்டுநர் கைது...

காடுவெட்டிபாளையம் பகுதியில் நாளை மின்தடை

பாப்பம்பட்டி, என்.ஜி.பாளையம், எஸ்.ஆர்.பாளையம், அன்னூர் பகுதி மற்றும் சுண்டமேடு பகுதியில் ஜூன் 15 காலை 9 மணி முதல் மாலை 4...

பட்டணம் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு

பட்டணம், பட்டணம் புதூர், கம்பன் நகர், நொய்யல் நகர், சத்யநாராயணபுரம், காரவளி சாலை, நாகமநாயக்கன்பாளையம், காவேரி நகர் மற்று...