கோவையில் அதிகரிக்கும் டெங்கு நோய் தாக்கம்- மெத்தனம் காட்டும் அரசு நிர்வாகம் ?

கோவையில் கடந்த சில வாரங்களாக டெங்குவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே உள்ளது. கடந்த மாதம் 8-க்கும் மேற்பட்டோர் டெங்குவால் பாதிக்கப்பட்டு கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில், இரண்டுக்கும் மேற்பட்டோர் உயிரும் இழந்தனர்.

இதனிடையே, கோவை மாநகராட்சி நிர்வாகம் அன்றாடம் மாநகராட்சிக்கு உட்பட்ட வார்டு பகுதிகளுக்குச் சென்று டெங்கு கொசு ஒழிப்பு நடவடிக்கையாக அபேட் மருந்தினை தெளித்து பொதுமக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.

கோவை மாவட்ட ஆட்சியரும் டெங்கு கொசு ஒழிப்பு நடவடிக்கை குறித்து அவ்வப்போது ஆய்வுப் பணி மற்றும் ஆலோசனைக் கூட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.

இருப்பினும், மாவட்டத்தில் டெங்குவின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. தற்போது, கோவை அரசு மருத்துவமனையில் டெங்குவால் பாதிக்கப்பட்ட 15 பேர் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். காய்ச்சல் காரணமாக 85 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதில், கேரளா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் தற்போது பருவக்கால மாற்றத்தின் காரணமாக எய்டஸ் வகை கொசு லார்வாக்கள் அதிகரித்து டெங்கு உள்ளிட்ட நோய்கள் பரவிவருகின்றன. அங்கு சென்று வரும் மக்களிடம் இந்த நோய் தொற்று ஏற்பட்டு பிற மாநிலங்களுக்கு பரவிவருவது குறிப்பிடத்தக்கது.

விழிப்புணர்வு அவசியம் மக்களே...!

மக்கள், தங்களது குடியிருப்புகளைச் சுற்றிலும் தேவையற்ற பொருட்கள் இல்லாதவாறு, கொசு உற்பத்தியாகக் கூடிய வகையில் தண்ணீர் தேங்காதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும். 

பழைய டயர்கள், தேங்காய் ஓடுகள், தண்ணீர் தேங்கும் வகையிலான பொருட்களை உடனடியாக அகற்ற வேண்டும். வீட்டில் தண்ணீர் தேக்கிவைத்துள்ள பொருட்களை முழுவதுமாக மூடி பாதுகாப்பாக வைக்க வேண்டும்.

வாரம் ஒருமுறையேனும் வீட்டினையும், குடியிருப்பு பகுதியினையும், கழிவுநீர் வாய்க்காளையும் சுத்தப்படுத்த வேண்டும்.

என்னதான், மாவட்ட நிர்வாகமும், மாநகராட்சி நிர்வாகமும் நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து நடவடிக்கைகள் மேற்கொண்டாலும் பொது மக்களாகிய நமக்கு சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த தெளிவான விழிப்புணர்வு அவசியமாகும்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...