கோவையில் அதிகரிக்கும் டெங்கு நோய் தாக்கம்- மெத்தனம் காட்டும் அரசு நிர்வாகம் ?

கோவையில் கடந்த சில வாரங்களாக டெங்குவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே உள்ளது. கடந்த மாதம் 8-க்கும் மேற்பட்டோர் டெங்குவால் பாதிக்கப்பட்டு கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில், இரண்டுக்கும் மேற்பட்டோர் உயிரும் இழந்தனர்.

இதனிடையே, கோவை மாநகராட்சி நிர்வாகம் அன்றாடம் மாநகராட்சிக்கு உட்பட்ட வார்டு பகுதிகளுக்குச் சென்று டெங்கு கொசு ஒழிப்பு நடவடிக்கையாக அபேட் மருந்தினை தெளித்து பொதுமக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.

கோவை மாவட்ட ஆட்சியரும் டெங்கு கொசு ஒழிப்பு நடவடிக்கை குறித்து அவ்வப்போது ஆய்வுப் பணி மற்றும் ஆலோசனைக் கூட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.

இருப்பினும், மாவட்டத்தில் டெங்குவின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. தற்போது, கோவை அரசு மருத்துவமனையில் டெங்குவால் பாதிக்கப்பட்ட 15 பேர் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். காய்ச்சல் காரணமாக 85 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதில், கேரளா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் தற்போது பருவக்கால மாற்றத்தின் காரணமாக எய்டஸ் வகை கொசு லார்வாக்கள் அதிகரித்து டெங்கு உள்ளிட்ட நோய்கள் பரவிவருகின்றன. அங்கு சென்று வரும் மக்களிடம் இந்த நோய் தொற்று ஏற்பட்டு பிற மாநிலங்களுக்கு பரவிவருவது குறிப்பிடத்தக்கது.

விழிப்புணர்வு அவசியம் மக்களே...!

மக்கள், தங்களது குடியிருப்புகளைச் சுற்றிலும் தேவையற்ற பொருட்கள் இல்லாதவாறு, கொசு உற்பத்தியாகக் கூடிய வகையில் தண்ணீர் தேங்காதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும். 

பழைய டயர்கள், தேங்காய் ஓடுகள், தண்ணீர் தேங்கும் வகையிலான பொருட்களை உடனடியாக அகற்ற வேண்டும். வீட்டில் தண்ணீர் தேக்கிவைத்துள்ள பொருட்களை முழுவதுமாக மூடி பாதுகாப்பாக வைக்க வேண்டும்.

வாரம் ஒருமுறையேனும் வீட்டினையும், குடியிருப்பு பகுதியினையும், கழிவுநீர் வாய்க்காளையும் சுத்தப்படுத்த வேண்டும்.

என்னதான், மாவட்ட நிர்வாகமும், மாநகராட்சி நிர்வாகமும் நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து நடவடிக்கைகள் மேற்கொண்டாலும் பொது மக்களாகிய நமக்கு சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த தெளிவான விழிப்புணர்வு அவசியமாகும்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...