தமிழகத்தில் கலவரம் நடக்க வாய்ப்புள்ளது என்றே கூறினேன்- பொன்.ராதா கிருஷ்ணன்


இந்து இயக்கத்தை சேர்ந்த தலைவர்கள் தாக்கப்பட்டால் காவல்துறை நடவடிக்கை போதுமானதாக இல்லை என்ற உணர்வு தொண்டர்களிடையே மேலோங்கி வருகிறது. தமிழகத்தில் கலவரம் நடக்கும் என நான் கூறவில்லை, கலவரம் நடக்க வாய்ப்புகள் உள்ளது என்றே கூறினேன் என கோவையில் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார்.

கோவையில் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் பேசியதாவது:-

ஜெயலலிதா மரணமடைந்த பின்னர் கொடநாடு எஸ்டேட்டில் நடக்கும் சம்பவங்கள் மர்மமாக இருப்பதால் அது குறித்த சிறப்பு விசாரணை நடத்த வேண்டும். தமிழகத்தில் இந்து மத தலைவர்கள் தாக்கப்படுவதால், கலவரம் ஏற்படும் அபாயம் இருப்பதாக மட்டுமே கூறினேன். கலவரம் ஏற்படுத்த சொல்லவில்லை. 

பிரதமரின் வீடு கட்டும் திட்டம் என கூறி பாஜக-வினர் தமிழகம் முழுவதும் பணம் வசூலிப்பது சரியா என்ற பத்திரிகையாளர் கேள்விக்கு, தனது ஊரிலேயே தனது பெயரை சொல்லி மோசடிகள் நடந்துள்ளது. உண்மையான பாஜக தொண்டன் இது போன்ற மோசடிகளில் ஈடுபட மாட்டான் என்று கூறினார்.

தமிழக மீனவர்கள் மீது இலங்கை அரசு அடக்குமுறை சட்டம் கொண்டு வருவது அந்நாட்டு அரசியலுக்கு சரியாக வரும். மீனவர் பிரச்சனையை மனிதாபிமான அடிப்படையில் அனுக வேண்டும் என பிரதமர் இலங்கையை வலியுறுத்தி வரும் நிலையில், இந்த சட்டம் இலங்கையில் கொண்டுவரப்பட்டுள்ளது. நமது தமிழக மீனவர்களை இந்த சட்டம் பாதிக்காது. 

இந்தியா அண்டை நாடுகளுடன் நட்புறவுடன் இருக்க விரும்புகிறது. எதிர்க்கும் நாடுகளுக்கு தக்க பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது. பண்டித் தீனதயாள் உபாத்தியாயா அவர்களின் நூற்றாண்டை முன்னிட்டு கட்சியை வளர்க்க பாஜக-வினர் நாடு முழுவது சுற்றுப்பயணம் மேற்கொள்கின்னர். அதன் ஒரு பகுதியாக இன்று நீலகிரியில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளனர். 

தமிழகத்தில் 11 ஆயிரம் பேர் கட்சி வளர்ச்சி பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் மாபெரும் மாற்றம் உருவாகும் என நான் நம்புகிறேன். 60 சதவிகிதம் சுற்றுலா தளங்களில் உள்ள கிழக்கு கடற்கரை சாலையை மேம்பாடு செய்ய வேண்டும். அதற்கு தமிழக அரசின் ஒத்துழைப்ஹப அவசியம். கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு தொடர்பாக தனிக்குழு அமைத்து விசாரிக்க வேண்டும். மக்களுக்கு தொடர்ந்து சந்தேகம் ஏற்படுவது அரசுக்கு நல்லது இல்லை. பெரிய சந்தேகத்திகுரிய இடமாக மாறி வரும் கொடநாடு விவகாரம் குறித்து விளக்கம் கொடுக்கும் வகையில் விசாரணை துரிதப்படுத்த வேண்டும்.

இவ்வாறு மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...