அரசு அதிகாரிகள் ஊழல் புகார் மீது நடவடிக்கை குறித்து மாவட்ட ஆட்சியரிடம் ஊழல் எதிர்ப்பு அமைப்பினர் கேள்வி

அரசு அதிகாரிகள் ஊழல் செய்வதாக நான்கு மாதங்களுக்கு முன்பு ஊழல் எதிர்ப்பு இயக்கத்தின் சார்பாக புகார் அளித்ததிற்கு என்ன நடவடிக்கை எடுக்கபட்டுள்ளது என மாவட்ட ஆட்சியரிடம் ஊழல் எதிர்ப்பு அமைப்பினர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

கோவை மாவட்ட நிர்வாகத்தில் கட்டுப்பாடற்ற வெளிப்படையான ஊழல் நடைபெறுவதாகவும், அதனை தடுக்க வலியுறுத்தியும் கடந்த மார்ச் 6ம் தேதியன்று ஊழல் தடுப்பு இயக்கத்தின் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது. மனு கொடுத்து 4 மாதங்களுக்கு மேல் ஆகியும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கோரி இன்று ஊழல் தடுப்பு இயக்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் வந்து புகார் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து கேள்வி எழுப்பினர்.

அப்போது, ஊழல் புகார்கள் குறித்து விசாரிப்பதற்கு தனி அலுவலகம் உள்ளது என்றும் அதனை அணுகுமாறும் மாவட்ட நிர்வகத்தால் ஊழல் தடுப்பு இயக்கத்தினருக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

இதனால் அதிருப்தி அடைந்த ஊழல் தடுப்பு இயக்கத்தினர், நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக பேசுவதாக மாவட்ட ஆட்சியர் மீது அதிருப்தி தெரிவித்தனர். மேலும், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு தினம்தோறும் 100-க்கும் மேற்பட்ட மக்கள் வந்து தங்களுடைய குறைகளை சொல்லும் நிலையில், சாதாரண பொதுமக்கள் கொடுக்கும் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா என்றும் கேள்வி எழுப்பினார். மேலும், மாவட்ட நிர்வாகம் எடுக்கும் நடவடிக்கைகள் வெளிப்படைத்தன்மை வாய்ந்ததாக இருக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

Newsletter

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...