வீட்டிலிருந்த நொருக்குத் தீணிகளை தின்றுவிட்டு ஹாயாக பொருட்களை திருடிச் சென்ற கொள்ளையர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள தொப்பம்பட்டியில் பட்டப்பகலில் வீட்டின் பின்பக்கக் கதவை உடைத்து 5 சவரன் தங்க நகை, 50 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் லேட்டாப் போன்றவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கோவை துடியலூரை அடுத்த தொப்பம்பட்டி குறிஞ்சி நகர் பகுதியில் வசித்து வருபவர் ராஜேந்திரகுமார். இயந்திர உதிரிபாகங்கள் உற்பத்தி செய்யும் தொழில் செய்து வரும் இவர் நேற்று காலை 11 மணியளவில் வீட்டை பூட்டி விட்டு உடையாம்பாளையத்தில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார்.

இரவு 10 மணியளவில் திரும்பி வந்து வீட்டின் கதவைத் திறந்துள்ளார். அப்போது வீட்டின் முன் கதவு உள்பக்கமாக தாளிடப்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து வீட்டின் பின்பக்கமாக சென்று பார்த்த போது பின் பக்க கதவு உடைக்கப்பட்டிருந்துள்ளது. இதனைக்கண்டு அதிச்சியடைந்து அவர் உள்ளே சென்று பார்த்தபோது வீட்டின் படுக்கை அறையில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த 5 சவரன் தங்க நகை, 50 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் லேப்டாப் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.

மேலும் வீட்டில் இருந்த பிரிட்ஜில் வைக்கப்பட்டிருந்த பழங்கள் மற்றும் நொருக்குத் தீணிகளை கொள்ளை அடித்தவர்கள்  சாவுகாசமாக அங்கேயே அமர்ந்து சாப்பிட்டு விட்டு, பின் குழந்தையின் பள்ளி புத்தக பையில் வைத்து திருடிய நகை, பணம், லேப்டாப் போன்றவற்றை எடுத்துச் சென்றிருப்பதும் தெரியவந்தது.

இது குறித்து துடியலூர் காவல்துறையினருக்கு ராஜேந்திர குமார் தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த போலிசார் கைரேகை நிபுணர்களைக் கொண்டு அங்கு பதிந்திருந்த கைரேகைகளை பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

பட்டப்பகலில் வீட்டின் பின்பக்கக் கதவை உடைத்து நகை, பணம், லேப்டாப் திருடப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...