டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை குறித்து மாநகராட்சி ஆணையல் தலைமையில் ஆலோசணைக் கூட்டம்


கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் தலைமையில் இன்று மாநகராட்சி கூட்டரங்கில் டெங்கு காய்ச்சல் மற்றும் வைரஸ் காய்ச்சல் தடுப்பு தொடர் நடவடிக்கைகள், விழிப்புணர்வு பிரச்சாரங்கள் குறித்து ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

மழைக்காலம் துவங்கி விட்ட காரணத்தினால் கேரளா உள்ளிட்ட அருகாமையில் உள்ள மாநிலங்களிலிருந்து டெங்கு காய்ச்சல் மற்றும் வைரஸ் காய்ச்சல் அதிகமாக பரவும் சூழல் உள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. 

இக்கூட்டத்தில் மண்டலம் வாரியாக ஒவ்வொரு வார்டு பகுதிகளில் டெங்கு காய்ச்சல் மற்றும் இதர காய்ச்சல் உள்ளிட்ட விபரங்களை கேட்டு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விரிவாக மாநகராட்சி ஆணையரால் ஆய்வு நடத்தப்பட்டது. இதன் தொடர்ச்சியாக பின்வரும் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் உத்தரவிடப்பட்டது.

கொசு ஒழிப்பு பணியாளர்கள் பணிக்கு தினமும் காலை செல்லும் முன்பாக அவர்களுக்கு பணிசெய்யும் முறை குறித்து எடுத்துரைக்க மண்டல சுகாதார அலுவலர்களுக்கு, சுகாதார ஆய்வாளர்களுக்கு உத்தரவிடப்பட்டது. 

டெங்கு பாதித்த இடங்களில் கல்லூரி மாணவ மாணவியர்களை கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். பள்ளிகள், கல்லூரிகள், அலுவலகங்கள், வணிக வளாகங்கள், குடியிருப்புகளில் தொடர்ச்சியாக கொசு உற்பத்தி காரணிகள் உள்ளதா என ஆய்வு செய்ய வேண்டும். பள்ளிகளில் உள்ள குடிநீர் தொட்டிகள், குடிநீர் வடிகட்டும் இயந்திரங்கள், டிரம்கள், சிண்டெக்ஸ் ஆகியவற்றையும் முறையாக சுத்தப்படுத்தவும், அனைத்து (ழுர்வு)  நீர் தேக்கத் தொட்டிகளில் குளோரின் உரிய அளவில் இருப்பதை சுகாதார அலுவலர்கள், சுகாதார ஆய்வாளர்கள் ஆய்வு செய்ய வேண்டும். அனைத்து மண்டல உதவி ஆணையாளர்களும், மாநகர நல அலுவலரும் முறையாக ஆய்வு மேற்கொள்ளப்படுகிறதா என்று கண்காணிக்கும் பணி மேற்கொள்ள வேண்டும். மேலும், டெங்கு அதிகமாக பதிவாகும் பகுதிகளில் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் மாநகராட்சி ஆணையாளர் அவர்களால் எச்சரிக்கப்ட்டது.

டெங்கு காய்ச்சல் வந்தால் சுயமாக மருந்துகள் எடுத்துக்கொள்ள வேண்டாம். போலி மருத்துவரிடம் சிகிச்சைக்கு செல்ல வேண்டாம். தொடர்ச்சியாக காய்ச்சல் இருக்கும் பட்சத்தில் அருகில் உள்ள அரசு சுகாதார நிலையங்கள் அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும். தொட்டிகளை பீளிசிங் பவுடர் கொண்டு வாரம் ஒரு முறை சுத்தம் செய்ய வேண்டும். தொடர்ச்சியாக கொசு ஒழிப்பு பணிக்கு பொது மக்களும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் கேட்டுக்கொண்டார்.

ஆணையரின் தலைமையில் நடைபெற்ற இவ்வாய்வு கூட்டத்தில் துணை ஆணையர் ப.காந்திமதி, மாநகர நல அலுவலர் கே.சந்தோஷ்குமார், தெற்கு மண்டல உதவி ஆணையர் ரவி, மண்டல சுகாதார அலுவலர்கள், அனைத்து சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...