நடிகர் தலைவாசல் விஜய் வீட்டில் கொள்ளை


நடிகர் தலைவாசல் விஜய்க்கு சொந்தமாக கோவை துடியலூரை அடுத்த தொப்பம்பட்டி பகுதியில் வீடு உள்ளது. இந்த வீட்டில் வசித்து வருபவர் ராஜேந்திரன் (27). ‘லிப்ட்’ தயாரித்து நடத்தி வரும் இவர் நேற்று மாலை வீட்டை பூட்டி விட்டு மனைவியுடன் தனது நிறுவனத்திற்கு சென்றார்.

இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள், வீட்டின் முன்பக்க கதவை கதவை உடைத்து உள்ளே சென்றனர். மேலும், அலமாரியில் இருந்த ரூ.50 ஆயிரம் பணம் மற்றும் 5 சவரன் எடையுள்ள தங்க சங்கிலி மற்றும் மோதிரங்களை கொள்ளையடித்து சென்றனர்.

நிறுவனத்திலிருந்து வீடு திரும்பிய போது இக்கொள்ளை சம்பவம் நடந்தது ராஜேந்திரனுக்கு தெரிவந்துள்ளது. தொடர்ந்து அவர் அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த துடியலூர் போலீசார் இது குறித்து வழக்கு பதிவு  செய்தனர்.

மேலும், கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு ஆய்வு நடத்தப்பட்டது. அப்போது கொள்ளை நடந்த வீட்டில் இருந்து 2 கைரேகைகள் கண்டெடுக்கப்பட்டது.

தொடர்ந்து, இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...