சிஆர்பிஎப் துப்பாக்கி சுடும் பயிற்சி தளத்தில் அத்துமீறி நுழைந்ததாக 3 பேர் மீது வழக்கு

கோவை மாவட்டம், துடியலூர் பகுதியில் மத்திய ரிசர்வ் பாதுகாப்புப் படையின் துப்பாக்கிச் சுடும் பயிற்சி தளம் உள்ளது. இங்கு நேற்று கேரளாவில் இருந்து வந்த மூன்று பேர் வழிதவறி உள்ளே நுழைந்துள்ளனர். அப்போது அங்கு பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த சிஆர்பிஎப் படை வீரர்கள் இவர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

அப்போது இவர்கள், மலப்புரத்தினைச் சேர்ந்த பனிஸ் (21), அர்ஷத் (20) மற்றும் எர்ணாகுளத்தினை சேர்ந்த தாமஸ் (20) என்பது தெரியவந்துள்ளது. வழிதவறி இங்கே வந்துவிட்டோம் என விளக்கம் அளித்த நிலையிலும் இவர்கள் மூவரும் மாவோயிஸ்ட் அமைப்பினைச் சேர்ந்தவர்களா என்ற கோணத்தில் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

தொடர்ந்து, அவர்களை துடியலூர் காவல்நிலையத்தில் ஒப்படைத்த நிலையில், மூவரிடமும் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அப்போது, அவர்கள் சிஆர்பிஎப் துப்பாக்கி சுடும் பயிற்சி தளத்தில் வழி தவறி நுழைந்தது உறுதிசெய்யப்பட்டது.

இருப்பினும், பாதுகாப்புப் படைத் தளத்தில் நுழைந்தமைக்காக அத்துமீறி நுழைந்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Newsletter

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...