ஒப்பந்த பணியாளர்களுக்கு ஊதியம் வழங்குவது தொடர்பாக சி.ஐ.டி.யூ சார்பில் காத்திருப்பு போராட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் ஒப்பந்த பணியாளர்களுக்கு ஊதியம் வழங்குவது தொடர்பாக கோவை மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர் சங்கம் (சி.ஐ.டி.யூ) சார்பில் இன்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.



மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் சுகாதாரப் பணியாளர்கள், பள்ளி துப்புரவு, டெங்கு பணியாளர்கள், வாகன ஓட்டுனர்கள் மற்றும் கிளீனர்கள் என நான்காயிரத்துக்கும் மேற்பட்டோர்கள் பணியாற்றி வருகிறார்கள். சமீப மாதங்களாக இவர்களுக்கு குறிப்பிட்ட தேதியில் ஊதியம் வழங்குவதில்லை. இது சம்மந்தமாக பலகட்டங்களாக நேரிலும் கடிதம் மூலமும் தங்களின் மேலான கவனத்திற்கு கொண்டுவதும் எவ்வித நடவடிக்கை இல்லததால், இது சம்மந்தமாக ஒப்பந்ததாரர்களிடம் பேசம் பொழுது எங்களுக்கு உரிய காலத்தில் இருந்து எங்களுக்கு பில்லிற்கான தொகை கிடைப்பதில்லை எனக் கூறுகின்றனர். 

எனவே, மேற்கண்ட பணியாளர்களுக்கு, முதன்மை வேலையளிப்பவர் என்ற முறையில் தனிகவனம் செலுத்தி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும், அதற்கு இன்று காலை அடையாள வேலை நிறுத்தம் ஈடுபட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

இந்த காத்திருப்பு போராட்டத்தில் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். பின்னர் இதுகுறித்து மாநகராட்சி துணை ஆணையர் காந்திமதியிடம் தங்கள் பிரச்சனையை கூறினார். இதற்கு முறையான நடவடிக்கை எடுத்து நாளைமறுநாளில் ஒப்பந்த பணியாளர்களுக்கு ஊதியம் வழங்கப்படும் என்றார்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...