வாகன ஓட்டிகளுக்கு வலுக்கும் கட்டுப்பாடுகள்...!

விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகள் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்க காவல்துறை மற்றும் போக்குவரத்துத் துறையைச் சார்ந்த அனைத்து செயலாக்கப் பிரிவு அதிகாரிகளுக்கும் கோவை மாவட்ட வட்டாரப் போக்குவரத்து அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி, சாலைப் பாதுகாப்பு குழுவினரால் நிர்ணயிக்கப்பட் வேக அளவை விட அதிவேகமாக வாகனத்தை இயக்குதல், சிவப்பு விளக்கு சமிக்கையை மதிக்காமல் வாகனத்தை இயக்குதல், சரக்கு வாகனத்தில் நிர்ணயிக்கப்பட்ட எடை அளவை விட கூடுதல் சுமையை ஏற்றிச் செல்லுதல், சரக்கு வாகனத்தில் பயணிகளை ஏற்றிச் செல்லுதல், மதுபோதையில் வாகனத்தை இயக்குதல் உள்ளிட்ட விதிமுறைகளை மீறி செயல்படும் வாகன ஓட்டிகளின் ஓட்டுநர் உரிமத்தை தற்காலிகமாக தடை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

இதனிடையே, சென்னை போக்குவரத்து ஆணையர், கோவையில் விபத்துக்களை குறைக்கும் பொருட்டு கீழ்க்கண்ட இடங்களில் அதிக கவனம் செலுத்த அறிவுறுத்தியுள்ளார்.

  • அதிக விபத்துகள் நடைபெறும் இடங்களை கண்டறிந்து அவற்றை சரி செய்தல்.
  • தமிழக முதலமைச்சர் நிவாரண நிதியினை விபத்தில் சம்பந்தப்பட்டவர்களுக்கு முறையாக வழங்குதல்.
  • பொது மக்களிடம் சாலைப் பாதுகாப்பு தொடர்பாக அதிக விழிப்புணர்வு ஏற்படுத்துதல்.
  • காவல்துறை மற்றும் போக்குவரத்துத் துறை மூலமாக செயலாக்க பணியினை தீவிரப்படுத்துதல் உள்ளிட்டவை அறிவுறுத்தப்பட்டுள்ளன.


அதன்படி, இன்றைய தினம் முதற்கட்டமாக காந்திபுரம் நகரப் பேருந்து நிலையம் மற்றும் உக்கடம் பேருந்து நிலையம் ஆகிய இரு இடங்களிலும் இதன் தொடர்ச்சியாக கோவை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு குறும்படங்கள் திரையிடப்படும் என கோவை வட்டார போக்குவரத்து அலுவலர் தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...