கோவையில் வனத்துறையினரின் அதிரடி சோதனையில் விலங்குகளின் ரோமங்களிலால் தயாரிக்கப்பட்ட பெயிண்டிங் பிரஷ்கள் பறிமுதல்



வன விலங்குகளின் ரோமங்களில் இருந்தோ அல்லது அவற்றின் உறுப்புகளை கொண்டோ எந்த பொருட்களையும் தயாரிக்கவோ, விற்பனை செய்யவோ கூடாது என்ற சட்டம் உள்ள நிலையில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில்  கீரி மற்றும் நரி போன்ற வன விலங்குகளின் ரோமங்களில் இருந்து தயாரிக்கப்பட்ட பெயிண்டிங் பிரஷ்கள் விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்தது. 

இதை தொடர்ந்து, இன்று வன உயிரின குற்றப்புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கோவை மாநகரில் உள்ள பல்வேறு கடைகளில் சோதனை நடத்தினர்.



வன உயிரின குற்ற புலனாய்வு பிரிவு அதிகாரி மதிவாணன் தலைமையில் 12 அதிகாரிகள் 3 குழுக்களாக பிரிந்து கோவையில் இன்று அதிரடி சோதனை நடத்தினர். 

அப்போது காந்திபுரம், டவுன்ஹால், சவுரிபாளையம் போன்ற பல்வேறு இடங்களில் வன உயிரினங்களின் ரோமங்களில் இருந்து தயாரிக்கப்பட்ட சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெயிண்டிங் பிரஷ்கள் பறிமுதல் செய்யப்பட்டன.



தொடர்ந்து, சோதனை நடைபெறும் என்றும் இது தொடர்பாக நாளை பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெறும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...