கர்நாடக சிறையில் சசிகலாவிற்கு சலுகை வழங்கியது குறித்து உயர்மட்ட விசாரணை தேவை- சிபிஐ தேசிய செயலாளர் டி.ராஜா

அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவிற்கு கர்நாடக மாநில சிறையில் சலுகை வழங்கியது குறித்தும், அதற்கு லஞ்சம் பெற்றது குறித்தும் உயர்மட்ட விசாரணைக்கு உத்திரவிடப்பட வேண்டும் என சிபிஐ கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா வலியுறுத்தியுள்ளார்.

கோவையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஞானையா கடந்த சனிக்கிழமை காலமானார். வெளிநாட்டில் இருந்து உறவினர்கள் வருகைக்காக உடல் தனியார் மருத்துவமனையில் வைக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், இன்று கோவை மாவட்ட கட்சி அலுவலகமான ஜீவா இல்லத்தில் ஞானையா உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா, மாநில செயலாளர் முத்தரசன் உள்ளிட்டோர் ஞானையா உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். முன்னதாக செய்தியாளர்கள் மத்தியில் தேசிய செயலாளர் டி.ராஜா பேட்டியளித்ததாவது:-

வாழ்நாள் முழுவதும் போராளியாகவே இருந்தவர் ஞானையா. தமிழகத்தில் கம்யூனிஸ்ட் கட்சி வளர்ச்சிக்கு பெரும் பாடுபட்டவர். தத்துவார்த்த பிரச்சனைகள் குறித்து கட்டுரைகள் எழுதியவர். மூத்த தலைவர் ஞானையா மரணம் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஏற்பட்ட பெரிய இழப்பு.

கர்நாடக மாநில சிறையில் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவிற்கு சிறையில் சலுகைகள் வழங்கியது குறித்தும் அதற்கு லஞ்சம் பெற்றது குறித்தும் உயர்மட்ட விசாரணைக்கு உத்திரவிடப்பட வேண்டும்.

குடியரசுத் துணை தலைவராக நிறுத்தப்பட்டுள்ள கோபால் கிருஷ்ண காந்தியை, நாட்டின் எதிர்காலம் கருதி அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் தேர்வு செய்ய வேண்டும். சென்னையில் காவல் நிலையம் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது கண்டிக்கத்தக்கது. சமீப காலமாக இந்துத்துவ அமைப்புகள் இது போன்ற நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றது. சென்னை துறைமுகத்தை தனியார் மயமாக்கும் மத்திய அரசின் முயற்சியை எதிர்த்து நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும், வெளியேயும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி குரல்கொடுக்கும். 

சென்னையில் இருக்கும் செம்மொழி மையத்தை இடமாற்றம் செய்வது என்ற மத்திய அரசின் நடவடிக்கையை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. இந்த முயற்சியையும் மத்திய அரசு கைவிட வேண்டும். 

இவ்வாறு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா தெரிவித்தார்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...