ஊரக பகுதிகளில் சுகாதாரத்தினை மேம்படுத்த மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்

கோவை மாவட்டத்தில் பருவமழை காலம் தொடங்கியதையடுத்து எல்லையோர கிராமங்கள் மற்றும் அனைத்து ஊரகப்பகுதிகளில் சுகாதாரப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதை கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் களஆய்வு மேற்கொண்டு வருகின்றார். 

அதன்படி, இன்று பொள்ளாச்சி நகராட்சி 31வது வார்டு பகுதிகளான தென்னியப்பன் கோவில் வீதி, எம்.ஜி.ஆர். கலனி, பொள்ளாச்சி தெற்கு ஊராட்சி ஒன்றியம் நாயக்கன்பாளையம், வடுகபாளையம், பொள்ளாச்சி வடக்கு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஜமீன்களத்தூர், செல்லாண்டி கவுண்டன்புதூர் ஆகிய ஊராட்சிப்பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் சுகாதார பணிகளை ஊரக வளர்ச்சித்துறை, பொதுசுகாதாரத்துறை, வருவாய்த்துறை ஆகிய அலுவலர்களுடன் மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.



இதுகுறித்து அவர் கூறுகையில், குடிநீர் மூலம் உற்பத்தியாகும் லார்வாக்கள் மூலம் பரவும் நோய்கள் வராமல் தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்டத்தின் எல்லையோர கிராமகங்களிலும், மாவட்டத்தின் பிற ஊரகப்பகுதிகளிலும் சுகாதார சீற்கேடு ஏற்படக்கூடாத வகையில் சுழன்று பணியாற்றிட அனைத்து அலுவலர்களுக்கும் அறிவுறுத்தபட்டுள்ளது.



அவ்வப்போது ஊராட்சி, நகராட்சி, வருவாய்த்துறை, சுகாதாரத்துறை உயர் அலுவலர்களைக் கொண்ட குழுக்கள் மாவட்டம் முழுவதிலும் மேற்கொள்ளப்பட்டு வரும் சுகாதரப்பணிகளை திடீர் களஆய்வின் மூலம் கண்காகித்து வருகின்றனர். தூய்மைப்பணியாளர்களும் அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டு வரும் பகுதிகளில் மட்டும் பணிகளை மேற்கொள்ளாமல், அனைத்து பகுதிகளிலும் கவனமுடன் பணிமேற்கொள்ள வேண்டும்.



சரிவர பணியாற்றாத அல்லது புகார் வரும் பணியாளர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். ஒவ்வொரு அலுவலர்களும் புறவெளிகளில் தூய்மையை உறுதி செய்வதோடு மட்டுமல்லாமல் வீடு வீடாக சென்று தண்ணீர் தேக்கிவைத்துள்ள தொட்டிகள், பிரிட்ஜில் உள்ள தண்ணீர் சேமிப்பான், வாளி போன்றவற்றினை சுத்தமாக இருக்கின்றனவா என்பதை உறுதி செய்திடல் வேண்டும்.

நீண்டநாட்களாக கண்டிப்பாக தண்ணீர் சேமித்து வைக்ககூடாது அது சுகாதார சீர்கேட்டிற்கே(கொசு உற்பத்தியாகவே) வழிவகுக்கும் என்பதை பொதுமக்கள் நினைவில் கொள்ள வேண்டும். தூய்மை பணி மேற்கொள்ள வரும் அலுவலர்களுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

வட்டார சுகாதார அலுவலர்கள் ஊரக பகுதிகளை தேர்வு செய்து சுழற்சி அடிப்படையில் மருத்துவ முகாம்கள் நடத்துதல், நிலவேம்பு கசாயம், பப்பாளி இளைச்சாறு போன்றவற்றினை வழங்குதல் வேண்டும். ஏதேனும் நோய் தொற்று கண்டறியப்பட்டால் உடனடியாக மாவட்ட அரசு மருத்துமனைக்கு பரிந்துறை செய்து முறையாக கண்கானிக்க வேண்டும். மேலும், அவர்களின் இருப்பிடப்பகுதிகளில் ஆய்வு செய்து நோய்காரணிகளை முற்றிலும் அழித்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். 

பள்ளி ஆசிரியர்களும் தங்கள் பள்ளிகளை சுகாதாரமாக வைப்பதோடு மட்டுமல்லாமல், சுகாதாரக் கல்வியினை பள்ளிகளில் மாணவ மாணவியர்களிடையே கற்பித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல் வேண்டும். ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் எல்லையோர கிராமங்களை தொடர்ந்து கண்கானித்து, நமது மாவட்டத்தின் எல்லையில் சுகாதார சீர்கேடு ஏற்படுமாயின் மாவட்ட ஆட்சித்தலைவருக்கு தங்களது உயர் அலுவலர் வாயிலாக தெரிவித்தல் வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தெரிவித்தார். 

இவ்வாய்வின்போது பொள்ளாச்சி சார் ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன், வட்டாட்சியர் செல்வி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள், சுகாதார அலுவலர்கள் மற்றும் பொதுசுகாரதாரத்துறை அலுவலர்கள்  உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...