பதின் பருவத்தினருக்கான இசைக்கருவிகள் இசைக்கும் "இசைஞர்- 2017" போட்டிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு


தி இந்து தமிழ் நாளிதழ், கோவை நன்னெறிக் கழகம் மற்றும் சரோஜினி நடராஜ் அறக்கட்டளை இணைந்து வழங்கும் பதின் பருவத்தினருக்கான இசைக்கருவிகள் இசைக்கும் போட்டி!

இசைக்கருவிகளை இசைக்கும் இளம் தலைமுறையினர் தங்களது திறன்களை வெளிப்படுத்த ஒரு தளம் ஏற்படுத்தித் தர வேண்டும் என்கிற எண்ணத்தில் கோவை நன்னெறிக்கழகம், சரோஜினி நடராஜ் அறக்கட்டளை மற்றும் தி இந்து தமிழ் நாளிதழ் இணைந்து ‘இசைஞர்- 2017’ எனும் இசைக்கருவிகள் இசைக்கும் போட்டிக்கு ஏற்பாடு செய்துள்ளது.

இதற்கு 13 முதல் 19 வயதிற்குட்பட்ட கோவை, திருப்பூர், நீலகிரி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் பங்கேற்கலாம்.

தகுதிச்சுற்று போட்டிகள் ஜூலை 29-ம் தேதியும் இறுதிப் போட்டி ஜூலை 30-ம் தேதி அன்றும் கோவை சரோஜினி நடராஜ் ஆடிட்டோரியத்தில் நடைபெறும்.

போட்டியில் கலந்துகொள்பவர்கள் அவரவர் இசைக்கருவிகளை கையோடு எடுத்து வரவேண்டும். உணவு மற்றும் பயணப்படி வழங்கப்பட மாட்டாது. பெயர், வயது, முகவரி, தொலைபேசி எண்கள், மின்னஞ்சல் ஆகியவற்றுடன் இசைக்க விரும்பும் கருவியின் பெயரையும் குறிப்பிட்டு விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க: http://bit.ly/hindu-instrumental-contest தி இந்து அலுவலகத்தில் (19&20 ஏ.டி.டி காலனி, எல்.ஐ.சி ரோடு, கோவை-18) நேரடியாகவும் விண்ணப்பிக்கலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள்: 15-07-2017.

வயது சான்று (பள்ளி / கல்லூரி அடையாள அட்டை) போட்டி நடைபெறும் அன்று கொண்டு வரவேண்டும்.

இளம் திறமைகளைக் கண்டறிந்து அங்கீகாரம் அளிக்க வேண்டும் எனும் உயரிய நோக்கில் இலாப நோக்கங்கள் இன்றி நடத்தப்படும் நிகழ்ச்சி இது. நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது.

மேலும் விபரங்களுக்கு: 9843131323 / 0422 - 2212572.

இதில், காட்ஸ் வில்லா, உடுமலை.காம் மற்றும் ரேடியோ பார்ட்னராக ரேடியோ சிட்டி மற்றும் டிஜிட்டல் பார்ட்னராக சிம்ப்ளிசிட்டி செயல்படுவது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...