பிசியோதெரபி கவுன்சில் அமைக்க மத்திய, மாநில அரசை வலியுறுத்தி தமிழக பிசியோதெரபி மருத்துவர்கள் மற்றும் மாணவர்கள் உண்ணாவிரதம்

பிசியோதெரபி கவுன்சில் அமைக்க மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி தமிழக பிசியோதெரபி மருத்துவர்கள் மற்றும் மாணவர்கள் சார்பில் ஒரு நாள் அடையாள கவன ஈர்ப்பு உண்ணாவிரதம் வரும் ஞாயிறன்று கோவை சிவானந்தா காலனியில் நடைபெறுகிறது. இது குறித்து போராட்ட ஒருங்கிணைப்பாளர் டாக்டர்.ராஜேஸ் கண்ணா வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

இந்தியாவில் பிசியோதெரபி கல்வி தொடங்கப்பட்டு 64 ஆண்டுகள் கடந்துவிட்டது. இருந்தபோதும் பிசியோதெரபி மருத்துவ கல்வியை நெறிப்படுத்த மத்தியிலோ, மாநிலத்திலோ பிசியோதெரபி கவுன்சில் இதுவரை அமைக்கப்படவில்லை.

டெல்லி, மாகாராஸ்டிரா, குஜராத் போன்ற மாநிலங்களில் மாநில அளவிலான பிசியோதெரபி கவுன்சில் செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில் 2009 ஆண்டே சட்டமன்ற கூட்டத்தொடரில் பிசியோதெரபி கவுன்சில் அறிவிக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்ட நிலையில் இதுவரை தமிழகத்தில் பிசியோதெரபி கவுன்சில் உருவாக்கபடவில்லை.

இதனால் நாளுக்கு நாள் போலி பிசியோதெரபி மருத்துவ படிப்புகள் அதிகரித்து வருகிறது. போலி பிசியோதெரபி மருத்துவர்கள் அதிகரித்து வருகிறார்கள். இவர்களால் பொது மக்களின் உடல் நலம் கேள்விக் குறியாகும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது. அதேப்போல், கவுன்சில் இல்லாததால் முறையாக மருத்துவ பட்டம் பெற்ற பிசியோதெரபி மருத்துவர்கள் அரசு பதிவு பெற்ற மருத்துவர்களாக பதிவு செய்ய முடியாத சூழல் நிலவுவதால் பொது மக்களால் போலி பிசியோதெரபி மருத்துவர்களை அடையாளம் காண முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

உலக சுகாதார அமைப்பு அறிக்கையின்படி 10,000 பேருக்கு ஒரு பிசியோதெரபி மருத்துவர் என்ற முறையில் பொது மக்களுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என்று கூறுகிறது. ஆனால், தமிழக மக்கள் தொகைக்கு அரசு சார்பில் 134 பிசியோதெரபி மருத்துவர்கள் மட்டுமே பணி அமர்த்தப்பட்டுள்ளனர்.

இதனால் அனைத்து தரப்பு மக்களுக்கும் பிசியோதெரபி மருத்துவம் சென்றடைய முடியாத நிலை உள்ளது. இந்த அனைத்து பிரச்சனைகளுக்கும் பிசியோதெரபி கவுன்சில் ஒன்று தான் தீர்வாக அமையும் என்பதை கருத்தில் கொண்டு மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழக பிசியோதெரபி மருத்துவர்கள் மற்றும் மாணவர்கள் சார்பில் கவன ஈர்ப்பு உண்ணாவிரதம் வரும் ஞாயிறன்று நடைபெறுகிறது.

இதில் பிசியோதெரபி மருத்துவர்களும், மாணவர்களும் மற்றும் பொதுமக்களும் கலந்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...