மோசடியில் ஈடுபட்டவரை தேடிச்சென்று சிறைபிடித்த பொதுமக்கள்- மோசடி நபர் காவல்துறையில் ஒப்படைப்பு

வெளிநாட்டில் வேலை, வங்கிக் கடன் எனக் கூறி மோசடியில் ஈடுபட்டவரை பொதுமக்களே தேடிச்சென்று சிறைபிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்த சம்பவம் கோவையில் அரங்கேறியுள்ளது.

கோவை மாவட்டம், சரவணம்பட்டி அரகே உள்ள விநாயகபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சண்முகம். இவர், அப்பகுதியில் வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகவும், வங்கிக் கடன், தனி நபர்க் கடன் பெற்றுத் தருவதாகவும் நிறுவனம் நடத்தி வந்துள்ளார். இதுகுறித்து செய்தித்தாள்களிலும் விளம்பரம் வெளியிட்டுள்ளார். 

இதைத்தொடர்ந்து, அதனை நம்பி வந்த மக்களிடம் வங்கிக் கடன் பெற சில ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் எனக் கூறி பெற்றுள்ளார். மேலும், மக்களிடம் இருந்து வங்கி செக் இதழையும், குறிப்பிட்ட அளவிற்கு கமிஷனாக பெருந்தொகையினையும் பெற்றுள்ளார். இவ்வாறு 30 முதல் 40-க்கும் மேற்பட்ட மக்கள் சண்முகத்திடம் பணம் வழங்கியுள்ளனர். தொடர்ந்து, அவர்களிடம் இவர் ஒரு செக் இதழில் குறிப்பிட்ட தொகையிட்டு வங்கிக் கடன் வந்துவிட்டாக திருப்பி வழங்கியுள்ளார். 

இந்நிலையில், அந்த செக் இதழை வங்கியில் செலுத்திய பொதுமக்களிம் இது போலியானவை என்று வங்கி அதிகாரிகள் தெரிவித்ததை அடுத்து சண்முகம் தங்களிடம் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.

இதையடுத்து சரவணம்பட்டி காவல்நிலையத்தில் ஏமாற்றமடைந்த பொதுமக்கள் புகார் அளித்துள்ளனர். இதனிடையே சண்முகம் தலைமைவானார். தொடர்ந்து, சண்முகம் குடியிருந்த விநாயகபுரம் பகுதியில் இருந்த சிசிடிவி கேமிராக்களின் காட்சிகளைக் கொண்டு ஏமாற்றமடைந்த பொதுமக்களே விசாரணை மேற்கொண்டனர். அப்போது, சண்முகம் வீட்டினை காலிசெய்து செல்லும் போது பயன்படுத்தப்பட்ட வாகன எண்ணைக் கொண்டு ஆர்டிஓ அலுவலகத்தில் விசாரணை மேற்கொள்கையில் அவர் கோபியில் தங்கியிருப்பது தெரியவந்துள்ளது.

தொடர்ந்து, கோபி சென்ற பொதுமக்கள் சண்முகத்தின் வீட்டில் வைத்து அவரை சிறைபிடித்து பின், கோவை மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர். அங்கு தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதுகுறித்து அவரிடம் பணம் செலுத்தி ஏமாற்றமடைந்த பொதுமக்கள் கூறுகையில், சண்முகம் மற்றும அவரது மனைவி ஆகிய இருவரும் இணைந்தே மோசடியில் ஈடுபட்டனர். கோவையில் மட்டும் 30 முதல் 40 பேரிடம் இவ்வாறு முறைகேட்டில் ஈடுபட்டுள்ளார். பிற மாவட்டங்களில் இதுபோன்று ஏதேனும் முறைகேட்டில் அவர் ஈடுபட்டுள்ளாரா என காவல்துறையினர் விசாரணை மேற்கொள்ள வேண்டும்" என தெரிவித்தனர்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...