ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் ஏரிகள் புனரமைக்கும் பணி குறித்து கோவை மாநகராட்சி ஆணையர் தலைமையில் விளக்க கூட்டம்

கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் தலைமையில் இன்று ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் 8 ஏரிகள் புனரமைக்கும் பணி குறித்த இடைநிலை அறிக்கை பற்றிய விளக்ககூட்டம் மாநகராட்சி கூட்டரங்கில் நடைபெற்றது. 

இக்கூட்டத்தில் புனரமைப்பு பணிக்கான மேற்கொள்ளவேண்டிய செயல்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. இதில், ஏரிகள் புனரமைக்கப்பட்டு வருடம் முழுவதும் ஏரியில் தண்ணீர் இருப்பதை உறுதி செய்தல் வேண்டும். ஏரிகளில் வந்து சேரும் கழிவு நீர் சுத்திகரிப்பு செய்தல் அவசியம் குறித்து விவாதிக்கப்ட்டது.

எட்டு ஏரிகளையும் இணைக்கும் வகையில் ஒரு மிதி வண்டிப்பாதை அமைத்தல் குறித்து ஆலோசிக்கப்பட்டது. ஏரி முகப்பை அழகுபடுத்தி மேம்பாடு செய்தல், சுற்றுலா தலங்கள் அமைத்து பயன்பாட்டினை மேம்படுத்துதல், பறவை சரணாலயம் அமைத்தல், மரங்கள் வளர்த்து பசுமைப்படுத்துதல், வளர்ந்த நாடுகளில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு இணையாக கோவை மாநகராட்சியில் உள்ள 8 ஏரிகளை மேம்படுத்த ஆலோசிக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் நகரப் பொறியாளர் (பொ) பார்வதி, மாநகராட்சி மேற்பார்வை பொறியாளர் லட்சுமணன், நிர்வாக பொறியாளர் சரவணகுமார், பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் அருண்பிரகாஷ், மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் தன்னார் அமைப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...