பூரண மதுவிலக்கு கோரி காங்கிரஸ் சார்பில் கோவையில் உண்ணாவிரதம்

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை அடுத்து தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் இருந்து 500 மீட்டருக்குள் செயல்பட்டு வந்த மூன்றாயிரத்திற்கும் மேற்பட்ட அரசு மதுபான கடைகள் மூடப்பட்டுள்ளன.



இதனைத்தொடர்ந்து, மூடப்பட்ட இந்த டாஸ்மாக் கடைகளை குடியிருப்புகள் நிறைந்த பகுதிகளில் திறக்க மதுபானக் கடை நிர்வாகமும், மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கைகளை மேற்கொண்டன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் பொதுமக்கள் ஆங்காங்கே பல்வேறு போராட்டங்களிலும் ஈடுபட்டனர். இதில் ஆங்காங்கே போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தடியடி மற்றும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், நீதிமன்ற தீர்ப்பை மதித்து மதுபானக் கடைகளை மூடவேண்டும் எனவும் தமிழகம் முழுவதும் பல்வேறு அரசியல் கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர்.

இதனிடையே, பூரண மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி கோவை சிவானந்த காலணியில் உள்ள மின்வாரிய அலுவலகம் முன்பு காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் தலைமையில் 100-க்கும் மேற்பட்டோர் உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகின்றனர்.

இது குறித்து குமரி அனந்தன் கூறுகையில், மதுவால் பல குடும்பங்கள் சீரழந்துள்ளது. பூரண மதுவிலக்கை தமிழகத்தில் கொண்டு வர வேண்டும். இதற்காக எந்த தியாகத்தையும் செய்ய தயாராக உள்ளோம்" என தெரிவித்தார்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...