கோவை மக்களின் நீண்ட நாள் கோரிக்கைக்கு வெற்றி- பொள்ளாச்சி- கோவை-க்கு ரயில் சேவை துவங்கம்


கோவை மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான கோவை- பொள்ளாச்சி வரை செல்லும் அகல ரயில் பாதை பாசஞ்ஜர் ரயில் இன்று மதியம் 1.35 மணிக்கு துவங்கியது.

கோவையிலிருந்து போத்தனூர், கிணத்துகடவு வழியாக பொள்ளாச்சி வரை செல்லம் பாசஞ்ர் ரயில் இன்று தனது சேவையினை துவங்கியது. கோவையிலிருந்து போத்தனூர் வரை ஏற்கனவே அகல ரயில் பாதை உள்ள நிலையில் போத்தனூரிலிருந்து பொள்ளாச்சி வரை அகல ரயில் பாதையாக மாற்ற பல வருடங்கள் கடந்த நிலையில் மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரவு கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோவை வந்த போது விரைவில் சேவை துவங்கப்படும் என தெரிவித்திருந்தார்.

அதனைத்தொடர்ந்து, பணிகள் நிறைவடைந்த நிலையில் சோதனை ஓட்டம் முடிந்து பயணிகளுக்கான ரயில் சேவை இன்று துவங்கியது. 

தினமும் மதியம் 1.35-க்கு கோவையிலிருந்து, போத்தனூர், கிணத்துக்கடவு வழியாக பொள்ளாச்சி செல்லும் இந்த ரயில் ஒரு மணி நேரத்தில் பொள்ளாச்சி சென்றடைகிறது. பொள்ளாச்சியில் இருந்து மதியம் 3.50-க்கு புறப்பட்டு மாலை 4.45 மணிக்கு கோவை வந்தடைகிறது.

இதற்கான கட்டணம் 15 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாகவும், முதல் 6 மாதங்களுக்கு சோதனை அடிப்படையில் இயங்கும் என கோவை ரயில் நிலைய மேலாளர் சின்னராஜூ தெரிவித்துள்ளார். இது குறித்து பயணிகள் கூறும்போது, மக்களின் நீண்ட கோரிக்கை நிறைவேற்றப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. குறைந்த கட்டணம் என்பதால் பலரும் பயனடைவார்கள் என தெரிவித்தனர்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...