தமிழ்நாட்டில் விளைநிலங்களை விட்டு வேளாண்குடிமக்கள் வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக சீமான் பேச்சு

இந்தியா அதிக அளவில் வளங்கள் உள்ள நாடு. இந்நிலையில், ஹட்ரோகார்பன் திட்டம், மீத்தேன் திட்டம் போன்றவற்றின் மூலம் விவசாய நிலங்களை பறித்து மக்களை வெளியேற்றி வளங்களை மத்திய அரசு சுரண்டி வருகிறது. இதை கேட்பதற்கு திராணியற்ற அரசாக மாநில அரசு உள்ளது என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.



காமராசரின் பிறந்தநாளை முன்னிட்டு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வடகோவை மேம்பால பூங்காவில் உள்ள பெருந்தமிழர் காமராசர் சிலைக்கு மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தினார்.



இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேட்டியளிக்கையில் அவர் கூறியதாவது:-

அரசியல் வரலாற்றில் தூய தலைவராக இருந்தவர் காமராசர் அவர்கள். அவருடைய ஆட்சிக் காலத்தில் பல்லாயிரக்கணக்கான பள்ளிக்கூடம் திறந்தவர். ஆனால், இன்று தெருவிற்கு தெருவில் மதுக்கடை அதிக அளவில் திறக்கப்படுகிறது. அவர் இல்லையென்றால் இன்று கல்வியறிவு பெற்ற சமுதாயமாக இருந்திருக்க முடியாது. உண்மை, நேர்மை, எளிமை போன்றவற்றை அவரது பெரும் சொத்தாக வைத்து வாழ்ந்து வந்தார். இன்றைய பிள்ளைகளுக்கும் ஒரு மிகச்சிறந்த வழித்தடம் காட்டித்தந்தவர். 

அவரது ஆட்சியை போலவே நடத்தவேண்டும் என்று சொல்பவர்கள் இன்று ஊழல் செய்து வருகின்றனர். அவர்கள் இதுபோன்று பேசுவதே அர்த்தமற்றது ஆகும். காமராசர் எந்த வழியில் பயணித்தாரோ அந்த வழியில் நாங்கள் பயணிக்க இந்நாளில் உறுதிமொழி ஏற்கின்றோம்' என்றார்.



மேலும், தமிழ்நாடு மீனவர்கள் பிரச்சனை குறித்து சீமான் பேசுகையில், தமிழ்நாடு மீனவர்கள் மீன்பிடி தொழிலை விட்டு வெளியேறி வருகின்றனர். இந்தியா நட்பு நாடு என்று கூறுகிறார்கள் ஆனால், தமிழ்நாட்டு மீனவர்களை இரண்டு மாதங்கள், மூன்று மாதங்கள் என இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து தண்டிக்கின்றனர்.

மக்களின் வாழ்வாதாரத்தைப் பற்றி மத்திய அரசு கவலை கொள்வதில்லை. இதை மத்திய அரசின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் யாரும் கண்டு கொள்வதில்லை. விளைநிலங்களை விட்டு இன்று வேளாண்குடிமக்கள் வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். 

இந்தியா அதிக அளவில் வளங்கள் உள்ள நாடு. ஹட்ரோகார்பன் திட்டம், மீத்தேன் திட்டம் போன்றவற்றின் மூலம் விவசாய நிலங்களை பறித்து மக்களை வெளியேற்றி வளங்களை மத்திய அரசு சுரண்டி வருகிறது. இதை கேட்பதற்க்கு மாநில அரசிற்கு திராணியில்லை. எங்களிடம் அதிகாரம் இருந்திருந்தால் காவேரி வேளாண்மை வாரியம் உரிய நேரத்தில் அமைத்திருப்போம். 

மதுக்கடையை தடை செய்ய வழக்கு தொடர்ந்தால், அது அரசு கொள்கை முடிவில் தலையிட முடியாது என்கின்றனர். நீதியின் பக்கம் மக்களுக்கு அநீதி நடக்கிறது' என்றார்.

Newsletter

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...