பிக்பாஸ் ஒரு அருவருக்கத்தக்க நிகழ்ச்சி- பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா

நடிகர் கமல்ஹாசனே வக்கிர நிகழ்ச்சிகளை நடத்திக்கொண்டு இருக்கிறார். இவர் ஏன் மற்றவர்களை விமர்சிக்கின்றார் என பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒரு அருவருக்கத்தக்க நிகழ்ச்சி என எச்.ராஜா தெரிவித்தார்.

கோவையில் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் பேசியதாவது:-

பணம் பாதாளம் வரை பாயும் என்பார்கள், ஆனால் தற்போது பரப்பன அக்ரஹாரம் வரை பாய்ந்திருக்கின்றது. கர்நாடக சிறைத் துறை டிஜிபி மீதான குற்றச்சாட்டு அதிர்ச்சி அளிக்கின்றது. திமுக, அதிமுக போன்ற கட்சிகள் ஊழலின் மூலமாக பெற்ற பணத்தை சிறைச் சாலையிலும் சொகுசு வாழ்க்கை வாழவும் பயன்படுத்துகின்றனர். இந்த மாதிரியான சக்திகளை தமி்ழகத்தில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும்.

ஜிஎஸ்டி வரிவிதிப்பினை பயன்படுத்தி சில இடங்களில் அதிக கட்டணம் வசூல் செய்வது தெரியவந்துள்ளது. சில இடங்களில் தெரியாமல் நடக்கும் இது போன்ற தவறுகளை 3 மாதத்திற்குள் சரி செய்து கொள்ள வேண்டும். இல்லையெனில் மூன்று மாதங்களுக்கு பின்னர் மத்திய அரசு கடும் நடவடிக்கை எடுக்கும். சசிக்கலாவிற்கு என தனியாக சமையல் அறை அமைத்து இருப்பது பணத்திமிறை காட்டுகின்றது. இதற்கு மக்களவை சபாநாயகர் எதிர்க்கட்சிகளை குற்றம் சுமத்துவது தவறானது. 

சிஸ்டம் சரியில்லை என தமிழக அரசை நடிகர் கமலஹாசன் விமர்சனம் செய்து இருப்பது தொடர்பான கேள்விக்கு, நடிகர் கமல்ஹாசனே வக்கிர நிகழ்ச்சிகளை நடத்திக்கொண்டு இருக்கிறார். இவர் ஏன் மற்றவர்களை விமர்சிக்கின்றார். மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒரு அருவருக்கத்தக்க நிகழ்ச்சி. 

நீட் தேர்வினால் தமிழக மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என சொல்வது தவறானது. சிபிஎஸ்சி பாடத்திட்டத்தில் படித்தவர்களும் தமிழர்கள்தான். ஊடகங்கள் மத்திய அரசுக்கும் மோடிக்கும் எதிராக செயல்படுவதை கைவிட வேண்டும். 50 ஆண்டு காலம் ஆண்ட திராவிட கட்சிகள் தமிழர்களை பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளிவிட்டனர்". 

இவ்வாறு எச்.ராஜா தெரிவித்தார்.

Newsletter

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...