மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளை ஒட்டியப் பகுதிகளில் அதிகப்படியான மழை பெய்ய வாய்ப்பு

நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களின் மலை பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது. சென்னையின் காலநிலை இனிமையாக இருக்கிறது. மேக மூட்டத்துடன் இருக்கிறது. எப்போதாவது சிறு தூறல்கள் வரலாம். வார கடைசியில் ஊர் சுற்றுவதற்கு ஏற்ற கால நிலை இது.

ஜூன் மாத கடைசி வாரத்தில் பெய்த மழைக்கு பிறகு நீலகிரி மற்றும் கோவை மலை பகுதிகள் மழை பெறாமல் அமைதியாக இருந்தன. இப்போது வெளியே தெரியாத அளவிற்கு மிதமான மழையை இந்த இரண்டு பகுதிகளும் பெற்று வருகின்றன. வரும் 19-ம் தேதியில் இருந்து மழையின் வேகம் அதிகரிக்க தொடங்கும். 2-3 நாளைக்கு பெய்யக் கூடும். தமிழ் நாட்டில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளை ஒட்டிய பகுதிகளில் நல்ல மழையை எதிர் பார்க்கலாம். 

தமிழக மலை பகுதிகளில் பெய்த மழை விவரங்கள். mm கணக்கில் 14.07.2017 காலை 8.30 வரை பெய்த விவரங்கள்:

நீலகிரிக்கு உட்பட்ட பகுதியில் மழை விபரம்

  • எமரால்டு - 80
  • கிளென்மோர்கன் - 29
  • மேல் பவானி - 28
  • அவலான்ஜி - 25
  • கூடலூர் பஜார் - 21
  • நடுவட்டம் - 20
  • கேத்தி - 18
  • முக்குறுத்தி - 17
  • பார்ஷன்ஸ் வேளி - 16
  • பைகாரா - 13
  • கோத்தகிரி - 10
  • உதகை - 10
  • குந்தா பாலம் - 10
  • சந்திநல்லா - 10
  • போத்திமுன்டு - 10


கோவைக்கு உட்பட்ட பகுதியில் மழை விபரம்

  • பரம்பிக்குளம் அணை - 45
  • வால்பாறை தாலுகா அலுவலகம் - 40
  • சோலையார் அணை - 38
  • வால்பாறை பிடிஓ - 34
  • சின்ன கல்லார் - 30
  • சிறுவாணி அணை - 27
  • துனகடவு - 25
  • மானாம்பள்ளி - 23
  • பொள்ளாச்சி - 13
  • கோத்தகிரி - 11
  • அடிவாரம் - 10


சென்னையை பொறுத்த வரையில் சிறு தூறல்கள் ஏற்படலாம். மற்றும் உதகை மாதிரியான கால நிலை நிலவுகிறது. இடியுடன் கூடிய மழைக்கு நாம் காத்து இருக்க வேண்டும்.

சென்னையில் இப்போது இடியுடன் கூடிய மழையை எதிர் பார்க்க வேண்டாம். இருண்ட வானத்துடன் மேக மூட்டத்துடன் இருக்கும். ஆனால் சென்னையின் தெற்கு பகுதியில் இருந்து பாண்டி மற்றும் கடலூர் பகுதி வரை மழை வரலாம்.

தமிழ் நாட்டின் இதர பகுதிகள்

டெல்டா மாவட்டங்களை ஒரு பகுதியில் குறிப்பாக திருவாரூர் மாவட்டத்திலும் மற்றும் அதன் அருகில் உள்ள பகுதிகளிலும் கிட்டத்தட்ட உறுதியான மழையை இன்று எதிர் பார்க்கலாம். வட மேற்கு உள் மாவட்டங்களில் மிதமான மழையை உறுதியாக எதிர் பார்க்கலாம். கிருஷ்ணகிரி, தர்மபுரி, வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களின் சில பகுதிகளில் தூறல்கள் அல்லது மிதமான மழையை எதிர் பார்க்கலாம். கடலூரில் இருந்து டெல்டா மாவட்டங்கள் வரை உள்ள பகுதிகளும் மழை பெற வாய்ப்பு உண்டு.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...