துணை குடியரசு தலைவர் தேர்தலில் கோபால கிருஷ்ண காந்திக்கு வாக்களிக்க வேண்டும் - வைகோ

துணை குடியரசு தலைவர் தேர்தலில் கோபால கிருஷ்ண காந்திக்கு வாக்களிக்க வேண்டுமென மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வேண்டுகோள்.

கோவை மற்றும் திருப்பூர் பகுதிகளில் நடைபெறும் கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்க மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கோவைக்கு வருகை தந்தார். 

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் குமரி ஆனந்தன் போராட்டம் வெற்றி பெற வாழ்த்து தெரிவித்தார்.

மேலும், குடியரசு தலைவர் தேர்தலில் யாருக்கு வாக்களிக்க வேண்டுமென அதிமுக எடுக்கும் முடிவு அவர்களது உரிமை என தெரிவித்தார். ஆனால் துணை குடியரசு தலைவர் தேர்தலில் அரசியல் கட்சியை சாராதவரும், காந்தி, ராஜாஜி பேரனுமான கோபால கிருஷ்ணகாந்தியை பாஜக அணி நாடாளுமன்ற உறுப்பினர்கள், தமிழக அதிமுக எம்.பிக்கள் தமிழகத்தை சேர்ந்தவர் என்பதற்காக மட்டுமின்றி, முழு தகுதி படைத்தவர் என்ற முறையில் வாக்களிக்க வேண்டுமென்பது எனது வேண்டுகோள் என வைகோ தெரிவித்தார்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...