கோவையில் திரையரங்கம் மீது கல்வீச்சு: இருவர் கைது

கோவை காந்திபுரத்தை அடுத்த ராம்நகர் பகுதியில் தனியாருக்கு சொந்தமான திரையரங்கம் செயல்பட்டுவருகிறது.

நேற்று மாலை திரையரங்கத்திற்கு மானமதுரை பகுதியைச் சேர்ந்த ஜெயபால் (22), சந்தோஷ் குமார் (25) ஆகிய இருவர் படம் பார்க்க சென்றனர்.

இந்நிலையில், குடிபோதையில் இருந்த இவர்கள், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இருக்கையை விட்டுவிட்டு வேறு இருக்கையில் அமர்ந்ததுடன் திரையரங்கிற்குள் படம் பார்ப்பவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தொடர்ந்து, அவர்கள் இருவரும் திரையரங்கில் இருந்து வெளியேற்றப்பட்டனர். இதனால், ஆத்திரமடைந்த இருவரும் திரையரங்கின் முன்பக்க கண்ணாடி மீது கல்வீசி விட்டு ஓடினர். 

இது குறித்து திரையரங்கு நிர்வாகம் காட்டூர் போலீசாரிடம் புகார் அளித்ததைத் தொடர்ந்து, புகாரின் பேரில் விடுதி ஒன்றில் தலைமறைவாக இருந்த இருவரும் கைது செய்யப்பட்டனர்.

Newsletter

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...