டெங்குவால் தொடரும் உயிர் பலி: திருப்பூரைச் சேர்ந்த சிறுவன் மரணம்


கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. ஆரம்ப நிலையில் கண்டறியப்பட்டால் முழுமையாக குணப்படுத்தக் கூடிய இந்த காய்ச்சல் குறித்து மக்களிடையே போதிய விழிப்புணர்வு இல்லாத காரணத்தால், டெங்குவால் உயிரிழப்போர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

திருப்பூர் மாவட்டம் சேவூர் பகுதியைச் சேர்ந்தவர் பிரவீன் (10). இவருக்கு கடந்த சில நாட்களாக தொடர் காய்ச்சல் இருந்துள்ளது. தொடர்ந்து சிறுவனின் பெற்றோர் அவரை தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், அவருக்கு காய்ச்சல் குணமடையவில்லை. தொடர்ந்து அவர் கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரின் இரத்த மாதிரிகளை எடுத்த மருத்துவர்கள் சோதனை மேற்கொண்டனர். அப்போது பிரவீனுக்கு டெங்கு இருப்பது கண்டறியப்பட்டது. தொடர்ந்து தனி வார்டில் சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், சிகிச்சை பலனின்றி கடந்த 14-ம் தேதியன்று பிரவீன் பரிதாபமாக உயிரிழந்தார்.

மக்களிடையே டெங்கு குறித்த போதிய விழிப்புணர்வு இல்லாமல் இருப்பதே இந்த மரணத்திற்கு காரணம் என்றும், காய்ச்சல் அறிகுறிகள் இருந்தால் உடனடியாக அரசு மருத்துவமனையை மக்கள் அணுக வேண்டும் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...