கோதபாளையத்தில் செயல்பட்டு வந்த சிறப்பு பள்ளியை அரசே ஏற்று நடத்த வேண்டும்- மாற்றுத் திறனாளிகள் பாதுகாப்போர் சங்கத்தினர் மனு

கோதபாளையம் பகுதியில் செயல்பட்டு வந்த சிறப்பு பள்ளியை அரசே ஏற்று நடத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத் திறனாளிகள் பாதுகாப்போர் சங்கத்தினர் இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.



கோவை மாவட்டம் கோதபாளையம் திருப்பூர் காதுகேளாதோர் சிறப்பு பள்ளி தாளாளர் முருகசாமி கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாலியல் புகார் சுமத்தபட்டு கைது செய்யப்பட்டார்.

இந்த பள்ளியில் சுமார் 110ம் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இதனால் அப்பள்ளியில் படித்து வந்த மாற்றுத்திறனாளி மாணவர்களின் கல்வியை உறுதி செய்யும் வகையில் பள்ளியை அரசே ஏற்று நடத்த வலியுறுத்தியும் மாற்றுத் திறனாளிகளின் கோரிக்கைகளை உடனடியாக அரசு நிறைவேற்ற வலியுறுத்து தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



இது குறித்து கோவை மாவட்ட செயலாளர் புனிதா கூறுகையில், 40 சதவிகிதம் உடல் குறைபாடு இருப்பின் அவர்களுக்கு அரசு உதவித் தொகை வழங்க வேண்டும். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 110 விதியின் கீழ் அமல்படுத்திய சட்டத்தை தற்போதைய அரசு செயல்படுத்த காலம் தாழ்த்தி வருகிறது. மாற்றுத் திறனாளிகள் சான்றிதழ் பெற அலைக்கழிக்கபடுகின்றனர். பிற மாவட்டங்களில் உள்ளது போல குறை தீர்க்கும் கூட்டங்களின் போது மருத்துவர்கள் மற்றும் அதிகாரிகள் கொண்ட குழு அமைத்து அடையாள சான்றிதழ் கிடைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்வதுடன் உடனடியாக கண்காணிப்புக் குழு மற்றும் மையங்கள் அமைக்க வேண்டும்". இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...