கோதபாளையத்தில் செயல்பட்டு வந்த சிறப்பு பள்ளியை அரசே ஏற்று நடத்த வேண்டும்- மாற்றுத் திறனாளிகள் பாதுகாப்போர் சங்கத்தினர் மனு

கோதபாளையம் பகுதியில் செயல்பட்டு வந்த சிறப்பு பள்ளியை அரசே ஏற்று நடத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத் திறனாளிகள் பாதுகாப்போர் சங்கத்தினர் இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.



கோவை மாவட்டம் கோதபாளையம் திருப்பூர் காதுகேளாதோர் சிறப்பு பள்ளி தாளாளர் முருகசாமி கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாலியல் புகார் சுமத்தபட்டு கைது செய்யப்பட்டார்.

இந்த பள்ளியில் சுமார் 110ம் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இதனால் அப்பள்ளியில் படித்து வந்த மாற்றுத்திறனாளி மாணவர்களின் கல்வியை உறுதி செய்யும் வகையில் பள்ளியை அரசே ஏற்று நடத்த வலியுறுத்தியும் மாற்றுத் திறனாளிகளின் கோரிக்கைகளை உடனடியாக அரசு நிறைவேற்ற வலியுறுத்து தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



இது குறித்து கோவை மாவட்ட செயலாளர் புனிதா கூறுகையில், 40 சதவிகிதம் உடல் குறைபாடு இருப்பின் அவர்களுக்கு அரசு உதவித் தொகை வழங்க வேண்டும். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 110 விதியின் கீழ் அமல்படுத்திய சட்டத்தை தற்போதைய அரசு செயல்படுத்த காலம் தாழ்த்தி வருகிறது. மாற்றுத் திறனாளிகள் சான்றிதழ் பெற அலைக்கழிக்கபடுகின்றனர். பிற மாவட்டங்களில் உள்ளது போல குறை தீர்க்கும் கூட்டங்களின் போது மருத்துவர்கள் மற்றும் அதிகாரிகள் கொண்ட குழு அமைத்து அடையாள சான்றிதழ் கிடைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்வதுடன் உடனடியாக கண்காணிப்புக் குழு மற்றும் மையங்கள் அமைக்க வேண்டும்". இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...