கோவையில் முக்கிய பகுதிகளை இணைக்கும் வகையில் 320 கோடி மதிப்பில் புறவழி சாலை- நெடுஞ்சாலைத்துறை அறிவிப்பு


கோவை, ஆத்துப்பாலம் முதல் உக்கடம் வரை ரூ.168 கோடியில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்க தடையின்மை சான்று கேட்டு, தேசிய நெடுஞ்சாலைத்துறைக்கு கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது. அனுமதி கிடைத்ததும், உடனடியாக 'டெண்டர்' கோரப்பட்டு பணிகள் துவக்கப்படும் என அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.



அவிநாசி சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, உப்பிலிபாளையம் முதல் சின்னியம்பாளையம் வரை உயர்மட்ட பாலம் கட்டுவதற்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பதற்கான ஒப்பந்தம் இறுதி செய்யப்பட உள்ளது. ஒப்பந்தம் இறுதியாகும் நாளில் இருந்து, நான்கு மாதத்துக்குள் திட்ட அறிக்கை சமர்ப்பிக்கப்படும். அதன்பின், அரசுத் தரப்பில் நிதி ஒதுக்கப்பட்டு ஒப்பந்ததாரர் இறுதி செய்யப்படுவர். ஓராண்டுக்குள் பாலம் கட்டுமான பணி துவக்கப்படும் என மாநில நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.



கோவை நகருடன் அவிநாசி சாலை, திருச்சி சாலை, சத்தி சாலை, மேட்டுப்பாளையம் சாலை, பாலக்காடு சாலை, பொள்ளாச்சி சாலைகள் இணைகின்றன. ஆறு வழித்தடங்களில் இருந்து வரும் வாகனங்கள் நகருக்குள் நுழைந்து மற்றொரு பகுதிக்கு செல்வதால் போக்குவரத்து நெருக்கடி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஓரிடத்தை கடப்பதற்கு ஒரு மணி நேரம் வீணாகிறது. இதற்கு தீர்வு காண பல்வேறு இடங்களில் உயர்மட்ட பாலங்கள் கட்ட தேசிய நெடுஞ்சாலை மற்றும் மாநில நெடுஞ்சாலைத் துறைகள் முடிவு செய்து ஆய்வு பணியில் ஈடுபட்டுள்ளன. 



இதில், மேட்டுப்பாளையம் சாலை - சத்தி சாலை - அவிநாசி சாலை - திருச்சி சாலையை இணைக்கும் வகையில் அரைவட்ட சாலை ஏற்படுத்த தேசிய நெடுஞ்சாலை ஆணையம் முயற்சித்து வருகிறது. குனியமுத்துாரில் இருந்து மதுக்கரை, சுண்டக்காமுத்தூர், பேரூர், செட்டிபாளையம், தீத்திபாளையம், மாதம்பட்டி, பேரூர் மேற்கு சித்திரை சாவடி, கலிக்கநாயக்கன்பாளையம், சோமையம்பாளையம், வடவள்ளி, பன்னிமடை, குருடம்பாளையம், நஞ்சுண்டாபுரம், நரசிம்மநாயக்கன்பாளையம் வழியாக மேட்டுப்பாளையம் ரோட்டை அடையும் வகையில் ரூ.320 கோடியில் மேற்கு புறவழிச்சாலை அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்கு எந்தெந்த இடங்களில் நிலம் கையகப்படுத்த வேண்டியிருக்கிறது என்கிற கள ஆய்வில் மாநில நெடுஞ்சாலைத்துறை ஈடுபட்டு வருகிறது.

Newsletter

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...