கோவையில் பல்வேறு தொழில்நுட்பங்களுடன் புதிய பொழுதுபோக்கு மால் விரைவில் துவங்க உள்ளதாக அதன் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கோவையில் புரூக்ஃபீல்ட்ஸ் மற்றும் பன் மால் என்னும் பன்னடுக்கு வர்த்தக மால்கள் செயல்பட்டு வரும் நிலையில் புரோஜோன் என்ற பெயரில் சரவணம்பட்டி பகுதியில் புதிய மால் விரைவில் துவங்க உள்ளது. இதற்கான செய்தியாளர் சந்திப்பு சரவணம்பட்டியில் உள்ள அந்த மாலில் இன்று நடைபெற்றது.



அப்போது, செய்தியாளர்களிடம் அதன் உரிமையாளர் நிகில் சதுர்வேதி பேசுகையில், இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஐஎண்டியூ நிறுவனம் சார்பில் இந்தியாவில் முதல் மால் அவுரங்காபாத்தில் துவங்கப்பட்டுள்ளது. தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என வர்ணிக்கப்படும் கோவையில் மிகப்பெரிய வணிக வளாகத்தை துவங்குவதில் மகிழ்ச்சி அடைகிறோம். 



தொழில் நகரமான கோவையில் மக்கள் ஒரே இடத்தில் பல்வேறு நிறுவனங்களின் பொருட்களை வாங்குவதை இம்மால் ஊக்கப்படுத்தும். இது நகரின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும். இந்த வணிகவளாகம் ஒரே நேரத்தில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வந்து செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அனைத்து பகுதிகளையும் ஒரே இடத்தில் இருந்து கண்காணிக்கும் புதிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியுள்ளோம். 



5 லட்சம் சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள இந்த வணிகவளாகத்தில் 9 ஐனாக்ஸ் வகை திரையரங்குகள் அமைக்கப்பட உள்ளது. மேலும் தீ விபத்து ஏற்பட்டால் உடனடியாக புகையை வெளியேற்றும் வகையில் புகை வெளியேற்றும் இயந்திரங்களும் அமைக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.



Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...