தமிழகத்தில் மாணவர்கள் மத்தியில் சமூக வீரோதிகள் கலந்துள்ளனர்- தமிழக பாஜக தலைவர் தமிழிசை பேட்டி

மாணவர்கள் மத்தியில் சில சமூக விரோதிகள் கலந்திருப்பதாகவும், எனவே தமிழகத்தில் நடைபெறும் போராட்டங்கள் கண்காணிக்கப்பட வேண்டியவையாக உள்ளதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்திரராஜன் வலியுறுத்தியுள்ளார்.

சேலத்தில் நடைபெறும் மறைந்த பாஜக பிரமுகர் ஆடிட்டர் ரமேஷ் நினைவு அஞ்சலி நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக விமானம் மூலம் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்திரராஜன் இன்று கோவை வந்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:-

நடிகர்கள் அரசியலுக்கு வருவதற்கு முன்னாள் என்ன சேவை செய்தார்கள் என்பதை நினைத்து பார்க்க வேண்டும். அரசியலில் மக்கள் சேவை செய்யும் தலைவர்கள் ஏற்கனவே உள்ளார்கள். பல வருடங்களாகவே சமூகம் சார்ந்த பிரச்சனைகளுக்கு குரல் கொடுத்து வந்ததாலேயே நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரும் போது தாங்கள் ஆதரவு அளித்தோம். தற்பொழுது இவ்வளவு பேசும் கமல் கடந்த ஓர் ஆண்டிற்கு முன்பு எவ்வளவோ பிரச்சனைகள் இருந்த போது எந்த கருத்தும் கூறாதது ஏன் ?.

திரைப்படத்தை போல் நினைத்துக்கொண்டு ஒரு நாள் முதலமைச்சர் ஆகலாம் என்ற கதை அரசியலில் இல்லை. அரசியல் என்பது ட்விட்டர் தளத்தில் இன்றி மக்களுடன் நிஜ தளத்தில் இருப்பது.

தமிழகத்தில் நடைபெறும் போராட்டங்கள் கண்காணிக்கப்பட வேண்டியவையாக உள்ளது. மாணவர்கள் மத்தியில் சில சமூக விரோதிகள் கலந்துள்ளனர். சமூக பாதுகாப்பிற்காக ஒருவர் கைது செய்யப்படும் போது உண்மை தன்மையை அறியாமல் கருத்து கூறும் பழக்கம் எதிர்க் கட்சிகளிடையே உள்ளது. கர்நாடக சிறைத்துறையில் டி.ஐ.ஜி ரூபா மாற்றப்பட்டது குறித்து தீர விசாரிக்கப்பட வேண்டும்" என்றார்.

Newsletter

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...