கோவையில் கேட்பாரற்று கிடந்த இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

கோவையில் உள்ள 'பைக் பார்க்கிங்'-களில் பல்வேறு இருசக்கர வாகனங்கள் கேட்பாரற்று நிறுத்தப்பட்டுள்ளது.

அவ்வாறு, நீண்டகாலமாக உரிமை கோராமல் நிறுத்தப்பட்ட வாகனங்களை போலீசார் இன்று பறிமுதல் செய்துள்ளனர்.

அதன்படி, பீளமேடு போலீசார் இன்று ஃபன்மால் வணிக வளாகத்தில் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வில் அங்கு 17 இருசக்கர வாகனங்கள் நீண்டகாலமாக கேட்பாரற்று கிடப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து, அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இதேபோல், மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் அருகே உள்ள தனியாருக்கு சொந்தமான பார்க்கிங்கில் இருந்து 4 வாகனங்களை சாய்பாபாகாலனி போலீசார் பறிமுதல் செய்தனர்.

நீண்டகாலமாக உரிமை கோரப்படாமல் நிறுத்தப்பட்ட இந்த வாகனங்களின் பதிவெண்களைக் கொண்டு, அவை திருடப்பட்டதாக புகார் அளிக்கப்பட்டுள்ளதா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...