ரயில் நிலைய வாசலில் அமைந்துள்ள விநாயகர் கோவில் உண்டியலில் திருட்டில் ஈடுபட்டவர் கைது

கோவை ரயில் நிலையத்திலிருந்து தினமும் ஏராளமான பயணிகள் பல்வேறு பகுதிகளுக்கு பயணம் மேற்கொண்டு வருவதால் எப்போதும் பரபரப்பாக காணப்படும். ரயில் நிலைய பிரதான வாசல் அருகே சிறிய விநாயகர் கோவில் ஒன்று அமைந்துள்ளது. இதன் அருகே ரோந்து பணி காவலர்கள் மற்றும் போக்குவரத்து காவலர்கள் எப்போதும் பணியில் ஈடுபட்டிருப்பர்.

இந்நிலையில் இன்று அதிகாலை சந்தேகத்திற்கு இடமான வகையில் கோவில் வாசலில் அமர்ந்திருந்த நபர் குச்சியில் பப்புள் கம் ஒட்டி உண்டியலில் இருந்த பணத்தை திருட முயன்றார். இதனைக் கண்ட பொதுமக்கள் அவரை பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

விசாரணையில் அவரது பெயர் சிங் என்றும், புலியகுளம் பகுதியைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து அவர் மீது வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அவரை சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...