ரயில் நிலைய வாசலில் அமைந்துள்ள விநாயகர் கோவில் உண்டியலில் திருட்டில் ஈடுபட்டவர் கைது

கோவை ரயில் நிலையத்திலிருந்து தினமும் ஏராளமான பயணிகள் பல்வேறு பகுதிகளுக்கு பயணம் மேற்கொண்டு வருவதால் எப்போதும் பரபரப்பாக காணப்படும். ரயில் நிலைய பிரதான வாசல் அருகே சிறிய விநாயகர் கோவில் ஒன்று அமைந்துள்ளது. இதன் அருகே ரோந்து பணி காவலர்கள் மற்றும் போக்குவரத்து காவலர்கள் எப்போதும் பணியில் ஈடுபட்டிருப்பர்.

இந்நிலையில் இன்று அதிகாலை சந்தேகத்திற்கு இடமான வகையில் கோவில் வாசலில் அமர்ந்திருந்த நபர் குச்சியில் பப்புள் கம் ஒட்டி உண்டியலில் இருந்த பணத்தை திருட முயன்றார். இதனைக் கண்ட பொதுமக்கள் அவரை பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

விசாரணையில் அவரது பெயர் சிங் என்றும், புலியகுளம் பகுதியைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து அவர் மீது வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அவரை சிறையில் அடைத்தனர்.

Newsletter

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...