கோவை மாநகராட்சி, (GIZ) என்கிற ஜெர்மன் அரசு நிறுவனம் இணைந்து நகர்புற போக்குவரத்து குறித்த ஆலோசனைக் கூட்டம்

கோவை மாநகராட்சியுடன் (GIZ) என்கிற ஜெர்மன் அரசு நிறுவனம் இணைந்து ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் நகர்புற போக்குவரத்து மேம்படுத்துவது குறித்த முதற்கட்ட கலந்தாலோசனைக் கூட்டம் இன்று கோவை மாநகராட்சி பிரதான அலுவலகக் கூட்டரங்கில் தமிழக அரசு சிறப்பு செயலர், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை ஆர்.ஜெயா தலைமையில், மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் முன்னிலையில் நடைபெற்றது.

இக்கூட்டம் இந்திய அரசு - ஜெர்மன் அரசு நிறுவனம் (GIZ) இணைந்து தமிழ் நாட்டில் கோவையிலும், ஒடிசா மாநிலத்தில் புவனேஸ்வரிலும், கேரள மாநிலத்தில் கொச்சினிலும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி அதனடிப்படையில் நகர்புற போக்குவரத்து வளர்ச்சி திட்டங்கள் குறித்து நடைபெறும் முதற்கட்ட கலந்தாலோசனை கூட்டம் ஆகும்.

கோவை மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நகர்புற போக்குவரத்து மேம்படுத்துவது குறித்து பல்வேறு கருத்துகள் விவாதிக்கப்பட்டது. அவை கோவை மாநகரில் நாளுக்கு நாள் ஏற்படும் வாகன பெருக்கத்தை மனதில் கொண்டு சாலை விரிவாக்கம் - ஸ்மார்ட் சாலைகள் அமைத்தல் குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது.

வாகனங்கள் நிறுத்துமிடம், மாசு கட்டுப்பாடு, ஒலி மாசு கட்டுப்பாடு குறித்து விவாதிக்கப்பட்டது. சாலை விபத்துகள் தவிர்ப்பதற்குரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், பாதசாரிக்குரிய நடைபாதை எவ்வாறு அமைக்கப்பட வேண்டும், சைக்கிள் பாதை அமைத்தல் ஆகிய தலைப்புகளில் விவாதம் நடைபெற்றது. இத்திட்ட வரைவு உருவாக்குவதற்கு பணி சார்ந்த துறைகளுடன் நன்கு கலந்தாலோசித்து முடிவெடுக்க தமிழக அரசு சிறப்பு செயலர், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை ஆர்.ஜெயா அவர்களால் அறிவுறுத்தப்பட்டது. 

இக்கூட்டத்தில் மாநகராட்சி துணை ஆணையர் ப.காந்திமதி, கோவை மாவட்ட உதவி ஆட்சியர் (பயிற்சி) சரண்யா ஹரி, மாநகராட்சி மேற்பார்வை பொறியாளர் லட்சுமணன், நகரப் பொறியாளர் (பொ) பார்வதி, போக்குவரத்துத்துறை அலுவலர்கள், மாநகராட்சி அலுவலர்கள், (GIZ) ஜெர்மன் நிறுவன பிரதிநிதிகள் மற்றும் தன்னார்வ அமைப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...