கதிராமங்கலம் மக்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கோவை அரசுக் கலைக் கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

நெடுவாசல் மற்றும் கதிராமங்கலத்தில் நடைபெற்று வரும் போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்து கோவை அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் இன்று கல்லூரி முன்பாக கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஓஎன்ஜிசி நிறுவனம் மற்றும் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், கதிராமங்கலம் மற்றும் நெடுவாசல் பகுதிகளில் நடைபெறும் மக்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் இன்று கோவை கலைக்கல்லூரி மாணவர்கள் இன்று கல்லூரி முன்பாக கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், விவசாயிகளின் உரிமைக்காக போராட்டம் நடத்திய மாணவி வளர்மதியை குண்டர் சட்டத்தில் கைது செய்த காவல் துறையினரின் நடவடிக்கையை கண்டித்து மாணவர்கள் முழக்கங்கள் எழுப்பினர். மாணவி வளர்மதியை உடனடியாக விடுவிக்கவில்லை எனில் அனைத்து கல்லூரி மாணவர்களையும் ஒருங்கிணைத்து தொடர் போராட்டங்களில் ஈடுபட போவதாகவும் போராட்டத்தில் ஈடுபட்ட கோவை அரசு கல்லூரி மாணவர்கள் தெரிவித்தனர்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...