பொது மக்களிடையே தூய்மை நகர விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் மென் பொறியாளர் சைக்கிள் பயணத்தை இன்று துவக்கினார்.

கோவையை சேர்ந்த மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வருபவர் தண்டபாணி. சைக்கிள் பிரியரான இவர் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த பல்வேறு பயணங்களை மேற்கொண்டு வருகிறார். கடந்த மாதம் குழந்தைகள் பாதுகாப்பை வலியுறுத்தி கோவையிலிருந்து பெங்களூர் வரை சைக்கிள் மேற்கொண்டார். 



தூய்மை நகர விழிப்புணர்வை ஏற்படுத்த இன்று காலை 3 மனிக்கு சென்னை நேரு விளையாட்டு அரங்கில் இருந்து சைக்கிள் பயணத்தை துவக்கி உள்ளார்.இரவு 9 மணிக்கு பெரம்பலூர் வந்தடையும் அவர் மறு நாள் காலை 3மனிக்கு அங்கிருந்து புறப்பட்டு மாலை 7.30 மணிக்கு திருச்சிக்கு வருபவர் இரவு 10.00 மணிக்கு கரூர் வருகிறார். மறு நாள் காலை காங்கயம் வழியாக 8.மனிக்கு கோவை பந்தய சாலையில் தனது பயணத்தை நிறைவு செய்கிறார்.   



ரோட்டரி கிளப் ஆப் கோயம்புத்தூர் ஆர்.எஸ்.புரம் கிளை சார்பில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது.இது குறித்து ரோட்டரி அமைப்பின் ஒருங்கினைபாளர் கூறும்போது மக்களிடையே தூய்மை நகர விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கிலும் ரோட்டரி சங்கம் சார்பில் நலிவடைந்து உள்ள ஆதரவற்றோர் பள்ளிகளுக்கு உதவிட பல்வேறு தனியார் நிறுவனங்கள் மாணவர்கள் பங்களிப்புடன் ஒரு குறிப்பிட்ட தொகை வழங்கபட உள்ளதாக தெரிவித்தனர்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...