ஜிஎஸ்டி உயர்வைக் கண்டித்து மோடிக்கு நாப்கின் அனுப்ப முயன்ற புரட்சிகர இளைஞர் முன்னணியினர் கைது

பெண்கள் பயன்படுத்தும் நாப்கின் மற்றும் உறிஞ்சுவான்களுக்கு 12 சதவிகிதம் சரக்கு மற்றும் சேவை வரி விதித்த மோடி அரசிற்கு கண்டனம் தெரிவித்தும், நாப்கினுக்கு முழு வரிவிலக்கு அளிக்க வலியுறுத்தியும் இன்று புரட்சிகர இளைஞர் முன்னணியின் சார்பில் மோடிக்கு நாப்கின் அனுப்பும் போராட்டம் நடைபெற்றது.



கோவை, ரயில் நிலையம் அருகில் உள்ள தலைமை அஞ்சல் நிலையம் முன்பு நடைபெற்ற இந்த போராட்டத்தில் புரட்சிகர இளைஞர் முன்னணியினர் திரளானோல் பங்கேற்று மக்கள் விரோத பாஜக மோடி அரசினைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பினர். தொடர்ந்து, பிரதமர் மோடிக்கு நாப்கின் அனுப்ப முயன்றனர்.



இதனைத்தொடர்ந்து, காவல்துறையினர் புரட்சிகர இளைஞர் முன்னணியினைச் சேர்ந்த 6 பேரை கைது செய்தனர்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...