டேராடூனில் உள்ள ராஷ்ட்ரிய மிலிட்டரி அகாடமியில் 8ம் வகுப்பு சேர விண்ணப்பங்கள் வரவேற்பு

டேராடூனில் உள்ள ராஷ்ட்ரிய மிலிட்டரி அகாடமியில் ஜனவரி 2018-யில் தொடங்கப்படவுள்ள எட்டம் வகுப்பில் சேர்வதற்கான நுழைவுத் தேர்வு வரும் 2017 டிசம்பர் 1ம் தேதி மற்றும் 2ம் தேதிகளிலும் மற்றும் நேர்முகத் தேர்வு 2018 ஏப்ரல் 5ம் தேதியன்று நடைபெறவுள்ளது.

நுழைவுத் தேர்வில் 2018 ஜூலை 1 அன்று 11 வயது நிறைவு பெற்று ஆறு மாதம் முதல் 13 வயது வரை உள்ள ஏழாம் வகுப்பு பயின்று வரும் மற்றும் தேர்ச்சி பெற்ற ஆண் மாணவர்கள் மட்டுமே கலந்துகொள்ள இயலும்.

விண்ணப்பம் மற்றும் தகவல் குறிப்பேட்டினை கமாண்டென்ட், ராஷ்ட்ரிய இந்தியன் திலிட்டரி கல்லூரி, டேராடூன்- 248 003, உத்ரகாண்ட் மாநிலம் எனும் முகவரிக்கு உரிய கட்டணம் செலுத்தி பெற்றுக் கொள்ளலாம்.

பூர்த்தி செய்த விண்ணப்பங்களை தேர்வுக் கட்டுப்பாடு அலுவலர், தமிழ்நாட அரசு பணியாளர் தேர்வாணையம், சென்னை 3 என்ற முகவரிக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் 2017 செப்டம்பர் 30 ஆகும்.

இத்தேர்வு தொடர்பான மேலும் விபரங்களை www.rimc.gov.in எனும் இணையதள முகவரியில் தெரிந்து கொள்ளலாம் என்றும் தகுதியுள்ள கோவை மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படைவீரர்களின் சிறார்கள் விண்ணப்பித்து பயனடையுமாறு கோவை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...