ரூ. 2000 விற்க முயன்ற குழந்தை மீட்பு- தாயிடம் குழந்தை நல குழு விசாரணை


அரியலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் ஆனந்தி (35). கோவை தடாகம் பகுதியில் உள்ள தனியார் பஞ்சாலை ஒன்றில் பணியாற்றி வருகிறார். இவருக்கு கடந்த 15 நாட்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த குழந்தையை குழந்தை இல்லாத ஒரு தம்பதியினருக்கு 2000 ரூபாய்க்கு விற்க முயன்றுள்ளார்.



குழந்தையை வாங்க இருந்த தம்பதியினருக்கு சில சந்தேகங்கள் எழுந்ததால் இது குறித்து உக்கடம் பகுதியில் உள்ள சைல் லைன் அமைப்பினரிடம் தொலைபேசியில் தகவல் கொடுத்துள்ளனர். இது தொடர்பாக ஆர்.எஸ்.புரம் காவல் நிலையம் ஆய்வாளர் மற்றும் ஆள் கடத்தல் தடுப்பு பிரிவினருக்கு அவ்வமைப்பினர் தகவல் அளித்ததைத் தொடர்ந்து தடாகம் பகுதிக்கு சென்ற காவல்துறையினர் குழந்தையை மீட்டு குழந்தைகள் நல குழுவினரிடம் ஒப்படைத்தனர்.

இது குறித்து ஆனந்தியிடம் விசாரணை மேற்கொண்டதில் திருமணம் ஆகாமலேயே தவறான தொடர்பால் பிறந்த குழந்தை என்பதால் விற்க முயன்றதாக தெரிவித்துள்ளார். மேலும் தனக்கு பிறந்த மற்றொரு குழந்தையை சில வருடங்களுக்கு முன்பு கேரளாவில் 50 ஆயிரம் ரூபாய்க்கு விற்றதாக விசாரணையில் தெரிவித்ததை கேட்டு அதிர்ச்சி அடைந்த குழந்தைகள் நல குழுவினர் அவரிடம் மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவையில் 2000 ரூபாய்க்கு குழந்தையை விற்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...