ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக கோவை வ.ஊ.சி மைதானத்தில் போராட்டம்: 14 இளைஞர்கள் கைது

கோவை வ.உ.சி மைதானத்தில் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் நெடுவாசல், கதிராமங்கலம் போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.

கோவை வ.உ.சி மைதானத்தில் இன்று மாலை கல்லூரி மாணவர்களும் இளைஞர்களும் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் நெடுவாசல், கதிராமங்கலம் பகுதிகளில் விவசாயிகள் மேற்கொள்ளும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் மாணவர்கள் முழக்கங்கள் எழுப்பினர்.

போராட்டம் குறித்து தகவல் அறிந்த காவல் துறையினர் வ.உ.சி மைதானத்திற்கு விரைந்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்களை உடனடியாக கலைந்து செல்லும்படியும் இல்லையெனில் கைது செய்வதாக எச்சரித்தனர்.

காவல் துறையினரின் எச்சரிக்கையையும் மீறி இளைஞர்கள் போராட்டத்தை தொடர்ந்ததால் அவர்களை காவல் துறையினர் கைது செய்ய முயன்றனர்.

அப்போது அப்போது இளைஞர்கள் எழுந்தவுடன் அவர்களை  காவல்துறையினர்  விரட்டிச்சென்று கலைத்தனர். கலையாமல் நின்று கொண்டு இருந்த பெண்கள் உட்பட  14 பேரை காவல் துறையினர் கைது செய்து ரேஸ்கோர்ஸ் காவல்நிலையம் அழைத்து சென்றனர். இதனையடுத்து வ.உ.சி மைதானத்தில் பாதுகாப்பிற்காக போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர். 

ஜல்லிக்கட்டுக்காக போராடியதை போல இளைஞர்கள் நெடுவாசல், கதிராமங்கலம் விவகாரங்களுக்காக ஓன்று சேர்ந்து விடக்கூடாது என்பதால் முன் கூட்டியே காவல் துறையினர் போராட்டங்களை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...