அதிமுகவினர் நடத்தும் நாடகத்தால் தமிழக மக்கள் ஏமாறுவதாக -கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் குற்றச்சாட்டு

சசிகலா, தினகரன், எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பி.எஸ் என அதிமுகவினர் நடத்தி வரும் நாடகத்தால் தமிழக மக்கள் ஏமாற்றமடைந்து வருவதாக கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் குற்றம்சாட்டியுள்ளார்.

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் ஜி.எஸ்.டி வரிவிதிப்பால் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ஜி.எஸ்.டியை நடைமுறைப்படுத்த மத்திய அரசு குறைந்தபட்சம் 2 ஆண்டுகளாவது கால அவகாசம் அளிக்க வேண்டும் என வலியுறித்தினார். ஒரு மொழியை விரும்பி படிப்பதை தடுப்பது எப்படி தவறோ அதைப் போலவே ஒரு மொழியை மற்ற மாநில மக்களின் மீது திணிப்பதும் தவறு எனக்கூறிய அவர் கோரிக்கைகளை வலியுறித்தி போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளை நேரில் சந்திக்க பிரதமர் முன்வர வேண்டும் எனவும் அவர் வலியுறித்தினார். ஊழலில்லா தமிழகத்தை உருவாக்க தங்கள் கட்சி எப்போதும் துணை நிற்கும் என தெரிவித்தவர். நடிகர் கமலஹாசனின் கருத்துக்களை ஊழலுக்கு எதிரான கருத்துக்களாக மட்டுமே பார்க்க வேண்டும் என தெரிவித்தார். 

ஆனால், கமலின் கருத்துக்களுக்கு பதில் கருத்து சொல்லி பல்வேறு பிரச்சனைகளை திசை திருப்ப தமிழக அமைச்சர்கள் முயல்வதாக அவர் குற்றம்சாட்டினார். நீட் தேர்வு விவகாரம் தொடர்பாக முன்பே தமிழக அரசு தெளிவுபடுத்தியிருக்க வேண்டும் எனவும், பாதிக்கப்பட்டுள்ள மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு உரிய தீர்வை குடியரசு தலைவர் மூலமாக மத்திய அரசிடம் இருந்து தமிழக அரசு பெற்றுத்தர வேண்டும் எனவும் தெரிவித்தார். கோவையில் மெட்ரோ இரயில் திட்டம் வருவது மகிழ்ச்சி அளிப்பதாகவும் தமிழக அரசின் இந்த திட்டத்தை வரவேற்பதாகவும் தெரிவித்தார்.

Newsletter

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...