ஆடி அமாவாசையினை முன்னிட்டு முன்னோர்களை வழிபட நொய்யல் படித்துறையில் குவிந்த பொதுமக்கள்

ஆடி அமாவாசை நாளில் ஆறு, குளங்கள், கடற்கரைகளில் நீராடி முன்னோர்களுக்கு திதி கொடுப்பது வழக்கம். இதன் மூலம் முன்னோர்களின் ஆசி கிடைக்கும் என்பது ஐதீகம். இன்றைய தினம் ஆடி அமாவாசை என்பதால் ஈரோடு பவானி கூடுதுறை, கொடுமுடி, திருப்பூர் மாவட்டம் உடுமலை, பேரூர் நொய்யல் படித்துறை உள்ளிட்ட இடங்களில் புனித நீராடி பக்தர்கள் முன்னோர்களை வழிபட்டு வருகின்றனர். 



கோவை மாவட்டம், பேரூர் நொய்யல் படித்துறையில் ஆயிரக்கணக்கானோர் ஆடி அமாவாசை சிறப்பு வழிபாட்டில் இன்று ஈடுபட்டனர். ஆடிமாதத்தில் வரக்கூடிய ஆடி அமாவாசை என்பதால் வழக்கத்தை விட இன்று பேரூர் கோவிலில் கூட்டம் அதிகளவிலேயே காணப்பட்டது. இதில், இறந்துபோன தங்களுடைய முன்னோர்களுக்கு திதி கொடுத்து எள், அரசி, சர்க்கரை, பழம் ஆகியன படையலிட்டு பூஜை செய்தனர். 



இன்று ஆடி அமாவாசை முன்னிட்டு அதிகாலை 4 மணி முதலே திரளான பக்தர்கள் கோவை மாவட்டம், பேரில் உள்ள நொய்யல் படித்துறையில் திரண்டு இறந்துபோன முன்னோர்களுக்கு திதிகொடுத்து வழிபட்டு வருகின்றனர்.



தொடர்ந்து, திதி முடித்துவிட்டு செல்லும்போது ஏழைகளுக்கு அன்னதானம், பசுக்கன்றுகளுக்கு அகத்திக்கீரைகளை வழங்கிச் சென்றனர். இதனால் நொய்யல் படித்துறையில் பக்கதர்களின் கூட்டம் நிரம்பி வழிந்து வருகிறது. 

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...