ஓ.பி.எஸ் அணியின் மீது எம்.எல்.ஏ. ஆறுக்குட்டி விதிக்கும் குற்றச்சாட்டுகளில் உண்மையில்லை- முன்னாள் அமைச்சர் செ.தாமோதிரன் விளக்கம்

ஓ.பன்னீர்செல்வம் அணியில் இருந்து விலகிய கவுண்டம்பாளையம் எம்.எல்.ஏ. ஆறுக்குட்டிக்கு உரிய மரியாதை அளிக்கப்பட்டு வந்ததாகவும், அவரது குற்றச்சாட்டுகளில் உண்மையில்லை எனவும் அதிமுக புரட்சி தலைவி அம்மா அணியை சேர்ந்தவரும், முன்னாள் அமைச்சருமான செ.தாமோதிரன் விளக்கம் அளித்துள்ளார்.

கோவை சீரநாயக்கன்பாளையம் பகுதியில் அதிமுக புரட்சி தலைவி அம்மா அணியை சேர்ந்தவரும், முன்னாள் அமைச்சருமான செ.தாமோதிரன் இன்று செய்தியாளர் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:-

தங்கள் அணியில் இருந்து விலகிய கவுண்டம்பாளையம் எம்.எல்.ஏ. ஆறுக்குட்டிக்கு உரிய மரியாதை அளிக்கப்பட்டது. அவரது குற்றச்சாட்டுகளில் உண்மையில்லை. தனது தொகுதியில் நலத்திட்டங்களை செயல்படுத்துவதற்காக அணி மாறியதாக கூறும் ஆறுக்குட்டி, இதற்காக எதிர்கட்சியாக இருக்கும் போது ஆளுங்கட்சிக்கு செல்வாரா ?.

தமிழகத்தில் தொண்டர்களுக்கும், தலைவர்களுக்கும் மரியாதை அளிக்கும் ஒரே தலைவர் ஓ.பன்னீர்செல்வம். இந்த தலைமையில் இருந்து ஆறுக்குட்டி வெளியேறியது வேதனை அளிக்கிறது. வழக்கு உள்ள அதிமுக அமைச்சர்கள் கைது செய்யப்படலாம். எம்.எல்.ஏ.க்கள் அமைச்சர் பதவி கேட்டு முதலமைச்சருக்கு தொல்லை கொடுத்து வருவதால் மேலும் கட்சி உடைய வாய்ப்புண்டு. இந்த ஆட்சி எவ்வளவு நாள் நீடிக்கும் என சொல்ல முடியாது. அணிகளாக அதிமுக பிளவுபட்டு இருப்பதால் பலமிழந்துவிடாது. இரு அணிகள் இணைய தற்போது வாய்ப்பில்லை. சசிகலா குடும்பத்தை வெளியேற்றினால் மட்டுமே இணைப்பு பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்பதில் உறுதியாக இருக்கிறோம்' என தெரிவித்தார்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...