காவல்துறையினரின் வஞ்சிப்பில் இருந்து பாதுகாக்கக் கோரி சாலையோரம் வசிப்போர் ஆட்சியரிடம் மனு

கோவை மாவட்டம், காந்திபார்க் பகுதியில் சாடையடித்து வாழ்க்கை நடத்தும் மக்கள் ஃப்ளாட் பாரங்களில் தங்கியுள்ளனர். 

கைக்குழந்தைகள், பள்ளி சிறார்களுடன் சுமார் 30-க்கும் மேற்பட்ட குடும்பங்களாக உள்ள இம்மக்கள் தங்களுக்கென ஒரு வீடு அல்லது இடம் வேண்டும், குழந்தைகள் மேற்படிப்பை தொடர சாதிச்சான்றிதழ் வேண்டும் என நீண்டகாலமாக மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்து வருகின்றனர். 



இதுகுறித்து கோவை மாவட்ட ஆட்சியரிடமும் குறைதீர் கூட்டத்தின் வாயிலாக கோரிக்கை மனுக்களை வழங்கி வந்துள்ளனர். இந்நிலையில், கடந்த ஞாயிறன்று (ஜூலை 23) இம்மக்கள் வசிக்கும் பகுதிக்குச் சென்ற காவல்துறையினர் இவர்களின் உடமைகளை அப்புறப்படுத்தி உடனடியாக வேறு பகுதிக்கு செல்லுமாறு இடையூறு செய்ததாகக் கூறப்படுகிறது.



இதனைத்தொடர்ந்து, இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த காந்திபார்க் ஃப்ளாட் பாரத்தில் வசிக்கும் மக்கள் தங்களின் உடலை சாட்டையால் அடித்தும், கத்தியால் கைகளை காயம் செய்தும் தங்களது வலிகள் நிறைந்த கோரிக்கையினை ஆட்சியர் அலுவலகத்தில் வெளிப்படுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். மேலும், காவல்துறையினர் தொடர்ந்து தங்களது மக்களுக்கு இடையூறு செய்து வருவதாகவும், அதனை தடுத்து நிறுத்த வேண்டும் எனவும் அம்மக்கள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...