வீட்டுமனைப் பட்டா வழங்காததால் குழந்தைகளுடன் தீக்குளிக்க முயற்சி- ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு


விட்டுமனைப் பட்டா வழங்கக் கோரி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குழந்தைகளுடன் குடும்பத்தினர் தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



கோவை மாவட்டம், சூலூர் பகுதியைச் சேர்ந்தவர் சரவணக்குமார். இவர், கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் தனது 4 சென்ட் அளவிலான விட்டுமனைக்கு பட்டா கேட்டு கோவை மாவட்ட ஆட்சியரிடம் விண்ணப்பித்து வந்துள்ளார். கடந்த 2017 செப்டம்பர் மாதம் மாவட்ட ஆட்சியராக அர்ச்சனா பட்நாயக் இருந்த நிலையில், ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர் கூட்டத்தின் போது சரவணக்குமார் தன் உடலின் மீது மண்ணெண்னை ஊற்றி தற்கொலைக்கு முயன்றார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் அவரை மீட்டு விசாரணைக்குப் பின் எச்சரிக்கை விடுத்து அனுப்பினர்.



இந்நிலையில், தற்போது வரை வீட்டுமனைக்கான பட்டா வழங்கப்படாததைக் கண்டித்து இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு தாய் அங்காத்தால், மனைவி அன்னபூரணி மற்றும் குழந்தைகளுடன் வந்த சரவணக்குமார் தங்களது உடலின் மீது மண்ணெண்னையினை ஊற்றி திக்குளிக்க முயற்சி செய்தனர். 

இதனைத்தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் அனைவரையும் மீட்டனர். தொடர்ந்து ரேஸ்கோர்ஸ் காவல்நிலையத்திற்கு அவர்களை அழைத்துச் சென்று காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...